பெத்தவங்க யாருக்குமே வரக்கூடாத பெரிய வலி? குழந்தை இறப்பால் சோகத்தில் ரொனால்டோ..

football CristianoRonaldo Ronaldo fifaplayer
By Edward Apr 19, 2022 06:42 AM GMT
Report

கால்பந்து விளையாட்டின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கள் நாட்டினை சேர்ந்த ரொனால்டோ - ஜார்னினா ரோட்ரிக்ஸ் என்பவரை திருமணம் செய்து இரு ஆண், 2 பெண் குழந்தைகளுடன் வாழ்க்கையை நடத்தி வந்தார்.

சமீபத்தில் ரொனால்டோவின் மனைவி கரப்பமாக இருந்துள்ளார். சில நாட்களுக்கு முன் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறக்கப்போவதாக மகிழ்ச்சியுடன் செய்தியை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் நேற்றிரவு கர்ப்பமாக இருந்த மனைவிக்கு பிரசம் நடந்துள்ளது.

பிரசவத்தின் போது ஆண், பெண் என இரட்டை குழந்தை பிறந்ததில் ஆண் குழந்தை மட்டும் மரணமடைந்துள்ளது. இதனை சோகத்துடன் அறிக்கை மூலம் ரொனால்டோ வெளியிட்டுள்ளார்.

தங்களுக்கு பிறந்த இரட்டை குழந்தையில் ஆண் குழந்தை உயிரிழந்தது. பெண் குழந்தை நலமோடு இருப்பது தான் எங்களுக்கு மிகுந்த பக்கபலமாக இருக்கிறது. பெற்றோர்களுக்கு யாருக்கும் வரக்குடாதை வலியை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.

பெண் குழந்தை எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்து மனவலிமையை கொடுத்திருக்கிறது. எங்களுக்கு சப்போர்ட்டாக இருந்த மருத்துவர்கள் செவிலியர்களுக்கு நன்றி. இதனால் எங்களுக்கு கொஞ்சம் தனிமை தேவை படுகிறது என்று கூறியுள்ளார்.

இதற்கு உலக நட்சத்திரங்கள் ரசிகர்கள் ஆறுதலாக கருத்துக்களை கூறி வருகிறார்கள்.