இப்படி ஒரு அசிங்கம் தேவைதானா..லோகேஷ் கனகராஜை கிழித்து எடுத்த விஜய்யின் அப்பா
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்தது. அதற்கு காரணம் விஜய் மட்டும் இல்லை, படத்தில் நடித்திருந்த முன்னணி நட்சத்திரங்களும் தான்.
லியோ படத்தின் முதல் பாதியை ரசிகர்கள் கொண்டாடினாலும், இரண்டாம் பாதியை பயங்கரமாக ட்ரோல் செய்தனர்.
இந்நிலையில் பிரபல இயக்குனரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர், தேசிங்கு ராஜா 2 படத்தின் விழாவில் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், சமீபத்தில் படம் ஒன்று பார்த்தேன். அந்த பட இயக்குனரை போனில் அழைத்து முதல் பாதி அருமையாக இருக்கிறது. அதை அவரும் நல்ல கேட்டு கொண்டு இருந்தார். அப்படியே இரண்டாம் பாகம் சிறப்பாக இல்லை. அந்த மதத்தில் அந்த மாதிரியான நம்பிக்கை எல்லாம் இல்லை. ஒரு தகப்பனே பிள்ளையை பலி கொடுக்க மாட்டேன் என்று சொன்னேன்.
முதல் பாதி நல்ல இருக்கு என்று சொன்னதை கேட்ட இயக்குனர். இரண்டாம் பாதி பற்றி பேசியதும், சார் நான் சாப்புட்டு இருக்கிறேன், அப்பறம் பேசுறேன் என்று சொல்லிவிட்டு கட் செய்தார். திருப்பி எனக்கு அழைக்கவில்லை. அந்த படம் வெளிவந்த பின் ரசிகர்கள் பயங்கர ட்ரோல் செய்தனர் என்று எஸ்.ஏ.சி கூறியுள்ளார்.
எஸ்.ஏ.சி- பேசிய அந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் என்றும். அவருடைய லியோ படத்தில் தான் தந்தை, மகளை பலி கொடுப்பது போல் காட்சி இருக்கும் என்று ரசிகர்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.