பாலாவின் முன்னாள் மனைவி மலருக்கும் பாடகி சைந்தவிக்கும் இப்படியொரு நெருக்கமா!! அவரே கூறிய ரகசியம்..
தமிழ் சினிமாவில் 2004ல் வெளியான அந்நியன் படத்தில் அண்டங் காக்கா கொண்டைக்காரி என்ற பாடலை பாடி பின்னணி பாடகியாக பிரபலமானவர் பாடகி சைந்தவி. இதனைதொடர்ந்து தமிழ் சினிமாவில் டாப் இசையமையாளர்கள் இசையில் பாடி வருகிறார்.
கடந்த 2013ல் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரை காதலித்து திருமணம் செய்த சைந்தவி, கடந்த செப்டம்பர் மாதம் பிரிந்து வாழ்வதாக அறிவித்தார். இருவரின் பிரிவு தமிழ் சினிமாவையே அதிர்ச்சியடைய வைத்தது.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் இயக்குனர் பாலாவின் முன்னாள் மனைவி மலருடன் ஏற்பட்ட பழக்கம் பற்றி பகிர்ந்துள்ளார். எல்லை இல்லா பாசம் இருவருக்கும் இருக்கிறது.
மலர் அக்காவுக்கு 1 மணிக்கு கால் செய்து பேச தோன்றியதால் அவர் எடுத்து பேசுவார். அவரை முதலில் சந்தித்தது பற்றி பேசினால் வேறு எங்கேயோ போகும், தினமும் இருவரும் பேசிப்போம் என்று சைந்தவி தெரிவித்துள்ளார்.
