பஸ்சில் கண்ட இடத்தில் கைத்து சீண்டிய நபர்!! குத்து விட்ட விஜய் டிவி நடிகை..
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சக்திவேல். சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்ட இந்த சீரியல் குறுகிய காலத்தில் நல்ல வரவேற்பை பெற காரணம் இப்படத்தின் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை அஞ்சலி பாஸ்கர் தான். இந்த சீரியல் மூலம் பிரபலமான அஞ்சலி பாஸ்கர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சில மோசமான சம்பவங்களை பற்றி பகிர்ந்திருக்கிறார். அதில், பெண்கள் பேருந்தில் செல்லும் போது சிலர் சீண்டல்களில் ஈடுபடுவார்கள்.
கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்து வந்ததால் ஆரம்பத்தில் தோழிகளின் உடைகளை அணிந்து கொண்டு தான் ஷூட்டிங் செல்வதாகவும் வண்டிக்கு போக கூடகாசு இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். நான் பேருந்தில் தான் செல்வேன். ஒருமுறை ஒரு நடுத்தர வயது நபர் என்னை தகாத முறையில் உரசிக்கொண்டிருந்தார். இதை பார்த்து கடுப்பாகிய நான் அவரை ஓங்கி ஒரு குத்துவிட்டேன். பின் அசிங்க அசிங்கமாக திட்டித் தீர்த்துவிட்டேன். உடனே அவன் இறங்கி சென்றுவிட்டான் என்று கூறியிருக்கிறார்.
பேருந்தில் பொதுவாக பெண்களுக்கு இப்படியொரு பிரச்சனை நடந்தால் பேருந்தில் இருப்பவர்கள் தட்டிகேட்பதை எல்லாம் பார்த்திருக்கிறேன். ஆனால் அந்த நேரத்தில் எனக்கு பெண்கள் உள்ளிட்ட யாருமே குரல் கொடுக்கவில்லை என்பது தான் என்னை ரொம்பவே வருத்தத்தில் ஆழ்த்தியதாக அஞ்சலி பாஸ்கர்தெரிவித்துள்ளார்.
அதேபோல் சீரியலில் சிறப்பாக நடித்து கொண்டிருப்பதால், என்னை பொறுத்தவரையில் என்னிடம் யாரும் தப்பாக இதுவரை நடந்து கொள்ளவில்லை என்றும் அத்துமீறி பேசுவதோ அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு அழைப்பதோ போன்றவை எனக்கு நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார் நடிகை அஞ்சலி பாஸ்கர்.