நான் எதற்கும் எமோஷனல் ஆகவில்லை.. மனம் திறந்து பேசிய சமந்தா..
Samantha
By Kathick
தென்னிந்திய சினிமாவையும் தாண்டி இன்று இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார் சமந்தா. படங்கள், வெப் சீரிஸ் கலக்கிக்கொண்டிருந்த சமந்தா, தற்போது தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார்.
ஆம், விரைவில் வெளிவரவிருக்கும் சுபம் எனும் படத்தை தயாரித்து, அதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் பிசியாக இருக்கும் சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் "நான் மேடையில் கண்கலங்கி கண்களை துடைப்பதற்கு காரணம் எமோஷனலாக இருப்பது அல்ல, எனது கண்கள் அதிகமான வெளிச்சத்தை பார்த்தால் சென்சிட்டிவ் ஆகி கண்ணீர் வந்துவிடும். அதனால்தான் என் கண்களில் கண்ணீர் வருகின்றது. மற்றபடி நான் எதற்கும் எமோஷனல் ஆகவில்லை. நான் நன்றாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கின்றேன்" என கூறியுள்ளார்.