எதிர்ப்பு தெரிவித்த குடும்பம்.. அதைமீறி கிளாமர் நடனம் ஆடிய சமந்தா
புஷ்பா படத்தில் உ சொல்றியா மாமா எனும் பாடலில் சமந்தா கிளாமர் நடனமாடி இருந்தார். இந்த பாடலில் நடனமாடுவதற்காக ரூ. 5 கோடி சம்பளமாக வாங்கியிருந்தார்.
இந்த நிலையில், இந்த பாடலில் நீ நடனமாட கூடாது என குடும்பத்தினரும், தோழிகளும் எதிர்ப்பு தெரிவித்ததாக சமந்தா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
"புஷ்பா படத்தில் நடனமாட வாய்ப்பு வந்தபோது நான் விவாகரத்து முடிவு எடுத்திருந்தேன். அந்த நேரத்தில் என்னிடம் எனக்கு தோழிகளும் சரி, குடும்பத்தினரும் சரி விவாகரத்து முடிவை அறிவிக்க போற நேரத்தில் கிளாமர் பாடலுக்கு நடனமாட வேண்டாம் என கூறினார்கள். ஆனால் அவர்களின் எதிர்ப்பை மீறி அந்த பாடலில் நான் நடனம் ஆடினேன். அது மிகப்பெரிய திருப்புமுறையாக அமைந்தது. அதை அனைவரும் அறிந்தது தான்".
"அந்த வாய்ப்பை நிராகரிக்க என்னிடம் எந்த காரணமும் இல்லை. எதற்காக நான் மறைக்க வேண்டும். நான் எந்த தவறும் செய்யவில்லை. திருமண வாழ்க்கையில் நான் நூறு சதவீதம் உண்மையாக இருந்தேன். ஆனால், அது எனக்கு ஒர்க் ஆகவில்லை" என பேசியுள்ளார் சமந்தா.