இனிமே முன்னாள் கணவருடன் சேரப்போவது கிடையாதா? சமந்தாவுக்கு நான் சைதன்யா மீது அப்படியொரு கோபமா!

Samantha Naga Chaitanya Akshay Kumar Bollywood
By Edward Jul 22, 2022 06:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா விவாகரத்து பிறகு நடிகர் நாக சைதன்யாவை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார். அவர் பக்கமே செல்ல விரும்பாத சமந்தா சமீபத்தில் கலந்து கொண்ட கரண் ஜோகர் நிகழ்ச்சியில் காட்டமாக பல உண்மைகளை கூறியுள்ளார்.

விவாகரத்து பற்றி கரண் கேட்டதற்கு, நீங்கள் என்னிடம் இதுபற்றி ஏற்கனவே ஆஃப் ஸ்கிரீனில் கேட்டு, விவாகரத்து குறித்து ஊக்குவித்து இருக்கிறீர்கள் என்று கூறியுள்ளார். இதனால் ஷாக்கான கரண் ஆமாம் நான் இதுபற்றி முன்பே கேட்டு பகிர்ந்து கொண்டேன் என்று பதிலளித்தார்.

அதன்பின், கணவர் எடுத்த முடிவு என ஆரம்பித்த கரணிடம் சமந்தா, என்னது என்று கேட்டு முறைத்துள்ளார். அதற்கு கரண், சாரி, முன்னாள் கணவர் என்று கூறி கேள்விகளை கேட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் இருந்து சமந்தா விவகாரத்தை முற்றிலும் ஏற்று திருமண வாழ்க்கை வெறுக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.