250 கோடி ஜீவனாம்சம்.. விவாகரத்துக்கு காரணமே இதுதான்.. நாக சைதன்யா பற்றிய உண்மையை கூறிய நடிகை சமந்தா..

Samantha Naga Chaitanya Akshay Kumar Indian Actress
By Edward Jul 22, 2022 04:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை சமந்தா தற்போது இணையத்தில் அதிகம் பேசப்படும் நடிகையாகவும் அதிகம் ஈர்க்கப்பட்ட நடிகை என்ற பட்டியலில் முதலிடத்தினை பிடித்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் கரண் ஜோகரின் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் நடிகர் அக்‌ஷய் குமாருடன் கலந்து கொண்டுள்ளார்.

250 கோடி ஜீவனாம்சம்.. விவாகரத்துக்கு காரணமே இதுதான்.. நாக சைதன்யா பற்றிய உண்மையை கூறிய நடிகை சமந்தா.. | Samantha Talks About Her Divorce Naga Chaitanya

கரண் கேள்விகள்

நிகழ்ச்சியில் பல விசயங்களை பகிர்ந்து கொண்ட சமந்தாவிடம் கரண், நாக சைதன்யாவுடனான விவாகரத்து குறித்து கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு சமந்தா, இந்த விசயம் மிகவும் கடினமாக இருந்ததாகவும், தற்போது நன்றாக உள்ளது, இயல்பான நிலைக்கு வந்துவிட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். எப்பவும் இல்லாத வலிமையுடையவளாக தற்போது மாறியிருக்கிறேன் என்று தெரிவித்தார்.

250 கோடி ஜீவனாம்சம்.. விவாகரத்துக்கு காரணமே இதுதான்.. நாக சைதன்யா பற்றிய உண்மையை கூறிய நடிகை சமந்தா.. | Samantha Talks About Her Divorce Naga Chaitanya

விவாகரத்து காரணம்

மேலும் நாக சைதன்யாவுக்கு உங்களுக்கு கசப்பான உணர்வுகள் இருந்ததா என்று கேட்டுள்ளார் கரண். அதற்கும் சமந்தா விளக்கமளித்துள்ளார். அந்த கஷ்டமான உணர்வுகள் என்னவென்றால், இருவரையும் (நாக சைதன்யா - சமந்தா) ஒன்றாக ஒரே அறையில் விட்டால், கூர்மையான பொருட்களை மறைத்து வைத்திருப்பது போன்றது. அந்த உணர்வு இப்போதும் இருக்கிறது. அதனால் ஒத்துழைக்காமல் போகலாம்.

250 கோடி ஜீவனாம்சம்

மேலும், நீங்கள் சந்தித்த நம்பமுடியாத ரூமர் செய்தி என்றால் எது என்று கேட்டுள்ளார். விவாகரத்துக்கு 250 கோடி ஜீவனாம்சம் கொடுப்பதாக கூறி ஒரு செய்தியை பார்த்து வருத்தப்பட்டதாகவும், எப்போது இன்கம் டேக்ஸ் அதிகாரிகள் வருவார்கள் அவர்களிடம் என்னிடம் எதுவுமே இல்லை என காட்டுவதற்காக காத்திருந்தேன் என்றும் காமெடியாக கூறியிருந்தார்.