ரஜினிகாந்துக்கு அடுத்து அந்த விஷயத்தில் சமந்தாதான்..இயக்குநர் கூறிய உண்மை..
சமந்தா
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்து நடித்து வரும் நடிகை சமந்தா, சிடெடல் படதில் வருண் தவானுடன் ஜோடிப்போட்டு நடித்துள்ளார்.
இப்படத்தினை தொடர்ந்து மும்பைக்கு அடிக்கடி சென்று வரும் சமந்தா நடிகை ஆலியா பட் முக்கிய ரோலில் நடித்த ’ஜிக்ரா’ படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
நிகழ்ச்சிக்கு சமந்தா மற்றும் இயக்குநர் திரிவிக்ரம் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஆலியா பட், திரையில் மட்டுமின்றில் நிஜத்திலும் நீங்கள் ஒரு ஹீரோ என்று சமந்தாவை பாராட்டியதுடன் இயக்குநர் திரிவிக்ரம் இயக்கும் படத்தில் நானும் அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
அவரை தொடர்ந்து பேசிய இயக்குநர் திரிவிக்ரம், அனைத்து மொழிகளிலும் பரவலான புகழை, ரஜினிகாந்திற்கு பின் சமந்தா மட்டுமே பெற்றுள்ளார் என்று புகழ்ந்துள்ளார். இதனால் சமந்தா சற்று கண்கலங்கியபடி காணப்பட்டார்.