40 வயசுல தான் அந்த விஷத்தில் ஈடுபாடு அதிகமாச்சு! கூச்சமின்றி ஓப்பன் செய்த நடிகை சமீரா ரெட்டி
வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவின் காதலியாக நடித்து அனைத்து இளைஞர்களை தன் பக்கம் ஈர்த்து வந்தார் நடிகை சமீரா ரெட்டி. தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த நடிகை சமீரா ரெட்டி தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்றெடுத்தார்.
சினிமாவில் இருந்து விலகினாலும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார். சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், இரு குழந்தைகளுக்கு தாயானதும் உடல் குண்டாகி சதைகள் தளர்ந்துவிட்டது. வெள்ளை முடி வந்து நரைத்து போய்விட்டது. அப்படி இருந்தும் நான் கவர்ச்சியாக உணர்கிறேன்.
சொல்லபோனால் படுக்கை அறையில் முன்பைவிட இப்போது தான் அதிக ஆர்வம் இருக்கிறது என்றும் மனிதனாக பிறந்த யாருமே தோற்றத்தை குறித்தும் அழகு குறித்தும் வருத்தப்பட தேவை இல்லை, வருத்தப்படுவதற்காக பிறக்கவும் வில்லை, வாழ்க்கையை வாழ்வதற்காக தான் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் நடிகை சமீரா ரெட்டி..