மாஸ் நடிகரின் மகன் படத்தில் இருந்து எஸ்கேப்பான ஹீரோ.. என்னதான் நடக்குது..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைக்கா நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் என்ற தகவல் கடந்த ஆண்டு வெளியானது.
வெளிநாட்டில் சினிமா படிப்பை படித்துவிட்டு தமிழ் நாடு பக்கம் வந்த ஜேசன் சஞ்சய்க்கு அவரது அம்மா சங்கீதா சிபாரிசு செய்து லைக்கா தயாரிப்பில் படம் இயக்க வாய்ப்பு வாங்கி கொடுத்தார்.
படம் பூஜை ஆரம்பிக்க இதுவரையில் அப்படத்தில் யார் நடிக்கிறார்? கதை ரெடியாகிவிட்டதா என்ற ஒரு அப்டேட்டும் உறுதியாக சொல்லவில்லை. ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் ஆரம்பத்தில் கவீன் முதல் சந்தீப் கிஷன் வரை என ஏகப்பட்ட நடிகர்கள் நடிக்கிறார்கள் என்ற லிஸ்ட் வெளியாகிக்கொண்டே வந்தது.
கடைசியில் நடிகர் சந்தீப் கிஷனை வைத்து இயக்குனால் படம் வெற்றிபெறும் என்றும் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஒரு ஆப்ஷன் தான், இன்னனும் ஹீரோவாக உறுதி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஜேசன் சஞ்சய்யின் தந்தை விஜய்யின் அட்மின் ஜெகதீஷ், பழனிச்சாமி தி ரூட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி சமீபத்தில் ரிவால்வர் ரீட்டா படத்தினையும் தயாரித்துள்ளார். அவர் இப்படத்தினை ஆரம்பித்திருந்தால் படமே வெளியாகி இருக்கும் என்று சினிமா வட்டாராத்தில் பேச்சுக்கள் எழுந்து வருகிறது.