புடவையை மண்ணுல புரட்டி அழுக்காக்கி கொடுத்தார்.. ஷூங்கில் பாலா படுத்திய பாடு!! நடிகை சங்கீதா..
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை சங்கீதா, தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பிதாமகன் படத்தில் இயக்குநர் பாலா இயக்கத்தில் நடித்தது பற்றி பகிர்ந்து கொண்டிருக்கிறார். அப்போது நான் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்தபோது கிட்டத்தட்ட 9 படங்கள் கைவசம் இருந்தது.
ஆனால் எனக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக தொடர்பு இல்லாமல் இருந்தது. அதனால் இங்கே சூர்யா, விக்ரம் எல்லாம் பெரிய ஹீரோக்கள் இருக்கிறார்கள் என்பது தெரியாமல் இருந்தது. அப்போது தான் பிதாமகன் படத்தில் நடிக்க கேட்டார்கள். ஆனால் தேதி பிரச்சனை காரணமாக அந்த படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து பல நடிகைகளை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் செய்தனர். அவர்களை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரவழைத்து நடிக்க வைத்தும் திருப்தி இல்லாமல் அனுப்பட்டனர்.
இதற்கிடையில் எனக்கு வேறொரு படத்திற்காக ஃபிலிம் பேரில் சிறந்த நடிகைக்கான விருது வாங்கினேன். என் குரு வம்சி சார் அடுத்து என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டதும் அடுத்தடுத்து படங்களின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. இயக்குநர் பாலா அழைத்தார், ஆனால் நடிக்க முடியாமல் போய்விட்டதாக சொன்னேன்.
அதற்கு அவர், சடார் என்று கோபப்பட்டு, பாலா சார் படத்தை நீ எப்படி மிஸ் செய்வா? உடனடியாக அவருக்கு போன் செய்து மனிப்பு கேள் என்று கூறினார். பின் உடனே நான், தேதிகள் இல்லை, அதனால்தான் நான் அப்படி சொன்னேன் என்று சொன்னவுடன், பாலா படத்தில் நடிக்க உன்னை கேட்டால் நீதான் தேதிகளை உருவாக்க வேண்டும் என்று கடிந்து கொண்டார்.
பின் பாலா சாருக்கு கால் செய்து ஃபிலிம் பேர் விருது வாங்கி இருப்பதை கூறினேன். அதற்கு அவர் அலட்சியமாக பதிலளித்தார். வம்சி சார் என்னை கூப்பிட்டு கண்டித்ததை அவரிடம் சொல்லிவிட்டு, படத்தில் வாய்ப்பு கொடுங்கள், வேலை கற்றுக் கொடுங்கள், உங்கள் கையால் வேலையை கற்றுக் கொள்ள ஆசை என்று சொன்னேன். உடனே என்ன செய்கிறாய் என்று கேட்டதும் பாலகிருஷ்ணா சார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்றேன்.
பின் அவர் கூப்பிட்டு சென்றதும், படத்தில் மேக்கப் கிடையாது என்று முன்பே சொல்லிவிட்டார்கள். என்னை அழுக்காக்கி, அழுக்கு புடவையை கொடுத்து, அவர் முன்னால் கொண்டு வந்து நிப்பாட்டினார்கள். அதை பார்த்து அதிர்ச்சியான பாலா, என்ன இன்னமும் இந்த பொண்ணு இவ்வளவு ஃபிரஷ்ஷாக இருக்கிறாள், அவள் உடுத்தியிருக்கும் புடவையை மண்ணில் புரட்டி கொடுங்கள் என்றார்.
அப்போது சூர்யா, விக்ரமை பார்த்தப்பின் என்னைவிட கேவலமாக இருந்தார்கள். பாலா என்றால் நாங்கள் இப்படித்தன் என்று பழகிக்கொண்டோம், எங்களுடைய ஒரே லட்சியம் அவரை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற ஒற்றைப்புள்ளிதான். ஒவ்வொரு காட்சி முடிந்தப்பின் மானிட்டரில் பார்த்து சூப்பர் என்று சொல்லிவிட்டால் எங்களுக்கு அப்படியொரு சந்தோஷம் என்று நடிகை சங்கீதா கூறியிருக்கிறார்.