குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனை.. மகன் சஞ்சய் வாழ்க்கையில் விளையாடிய தந்தை விஜய்
விஜய் மகன் சஞ்சய் இயக்குனராகியுள்ளார். ஆனால், இப்படத்தின் ஹீரோ குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.
இந்த நிலையில், தன்னுடைய படத்தின் கதையை சிவகார்த்திகேயனிடம் சென்று சஞ்சய் கூறியுள்ளார். ஆனால், படத்தின் கதையை கேட்டு, இது எனக்கு வேண்டாம் என கூறி நிராகரித்து விட்டாராம் சிவகார்த்திகேயன். சஞ்சய் கூறிய கதையில் கமர்ஷியல் விஷயங்கள் இல்லை என்பதால் தான் சிவகார்த்திகேயன் நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், இது உண்மையான காரணம் இல்லை என்று மறுபக்கம் வேறொரு தகவலும் வைரலாகி வருகிறது.
தனது தந்தை விஜய்யின் ஆசி இல்லாமல் தான் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறாரார் என்றும், இந்த நேரத்தில் சஞ்சய் கதையில் படம் நடித்தால், நாம் விஜய்யின் அதிருப்திக்கும் ஆளாக வேண்டும், விஜய்யின் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டும் என்று நினைத்து தான் சஞ்சய் கூறிய கதையை வேண்டாம் என சிவகார்த்திகேயன் நிராகரித்தாராம்.
You May Like This Video