என் 20 வயசுல அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண பல டைம் கேட்டாங்க.. அதை தாண்டி வரவே முடியாது!! பேரண்மை பட நடிகை..
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை படத்திற்கு ரசிகர்கள் நல்ல கொடுத்தனர். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை சரண்யா நாக். இவர் காதல், ரெட்ட வாலு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சரண்யா நாக் கடந்த ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்து வந்தார். தற்போது உடல் எடையை கூடியப்பின் வெளியுலகத்திற்கு வந்து பேட்டிகளில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில் அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொன்னது பற்றிய தகவலை பகிர்ந்துள்ளார். சினிமாவை பொறுத்தவரையில் பெண்களை ஒழுக்கமாக பார்ப்பார்களா என்ற சந்தேகம் இருக்கும். பேராண்மை படத்திற்கு பின் சில படங்களில் நடித்தேன், தெலுங்கில் நடித்தேன். ஆனால் உடலில் சில பிரச்சனை இருந்தது, அதனால் நடிக்காமல் போனது.
அட்ஜெஸ்ட்மெண்ட் உள்ளிட்ட பல பிரச்சனைகளை நான் சந்தித்து இருக்கிறேன், அது இல்லாமல் எப்படி இருக்கும். வெளிப்படையாக அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற வார்த்தை, திட்டுவது, அவமானப்படுத்துவது எல்லாம் நடக்கும். இல்லை என்று சொன்னால் அது பொய். அதெல்லாம் தாண்டி வந்து தான் இப்போது ஸ்டுடியோ வைத்துட்டு இருக்கிறேன். நமக்கு யாருமே இல்லை என்றதும் டைரக்டாகவே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண கேட்பார்கள்.
இதெல்லாம் கொச்சையா இருக்குன்னு நினைக்கலாம். கேட்கிறவன் கொச்சைன்னு எப்படி நினைக்கிறான். படம் எடுக்கனும் நல்ல இடத்திற்கு வரனும் என்று நினைப்பவன் எல்லாம் அப்படி கேட்கமாட்டான். படம் எடுக்காமல் பெண்களை போதை பொருளாக பார்க்கும், இயக்குனர்கள் கேட்பார்கள். சின்ன சின்ன படத்தில் நான் நடித்த போது இருந்தது. 20 வயதுக்கு மேல் என்னை அப்படி கேட்டார்கள். எல்லா நேரத்திலும் அதில் இருந்து தப்பிப்பது கஷ்டம். இதெல்லாம் தேவையான்னு யோசித்து இருக்கிறேன்.
இப்போது அப்படி கேட்டால், சமுகவலைத்தளம் ஒரு பிளஸ் ஆக இருக்கிறது. கேட்டால் ரெக்கார்ட் செய்து போடா என்று தைரியமாக பேசலாம் என்று நடிகை சரண்யா நாக் கூறியிருக்கிறார்.