ராதிகாவுக்கு முன் பிரபல நடிகையுடன் காதல்!! 2 ஆம் திருமணம் செய்ய ஆசைப்பட்ட சரத்குமார்..

Sarathkumar Devayani Raadhika Gossip Today Tamil Actress
By Edward Feb 19, 2024 01:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்தவர் நடிகை தேவயானி. முன்னணி நடிகர்கள் அஜித், விஜய், சரத்குமார் உள்ளிட்ட பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானார். சினிமாவில் அறிமுகமாகி நடித்து வந்த தேவயானி பிரபல இயக்குனர் ராஜகுமரனை காதலித்து திருமணம் செய்தார். குடும்பத்தை மீறி திருமணம் செய்து கொண்டதால் குடும்பமே இருவரை ஒதுக்கி வைத்திருந்தது. இப்படியொரு சூழலில் தேவயானி திருமணத்திற்கு முன்பே சரத்குமார் காதலித்து வந்துள்ளார்.

ராதிகாவுக்கு முன் பிரபல நடிகையுடன் காதல்!! 2 ஆம் திருமணம் செய்ய ஆசைப்பட்ட சரத்குமார்.. | Sarathkumar Angry Shooting Devayani Started Love

1984ல் சாயா என்பவரை திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்ற சரத்குமார் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 16 ஆண்டு திருமண வாழ்க்கையை விவாகரத்துமூலம் முறித்துக்கொண்டனர். இதற்கு காரணம், சாயா மனைவியாக இருக்கும் போதே நடிகை தேவயானியை ஒருதலையாக சரத்குமார் காதலித்தது தானாம்.

ஆரம்பத்தில் நக்மா, ஹீராவுடன் காதலில் இருந்து பின் தேவயானியை காதலித்திருக்கிறார் சரத்குமார். இதன்பின் தேவயானியின் அம்மாவிடமே சென்று பெண் கேட்டுள்ளார் சரத்குமார். மகளின் கேரியர் முக்கியம் என்று அசிங்கப்படுத்தி அனுப்பி இருக்கிறார் தேவயானி அம்மா. இதன்பின் தான் 2001 நடிகை ராதிகாவை திருமணம் செய்திருக்கிறார்.

ராதிகாவுக்கு முன் பிரபல நடிகையுடன் காதல்!! 2 ஆம் திருமணம் செய்ய ஆசைப்பட்ட சரத்குமார்.. | Sarathkumar Angry Shooting Devayani Started Love

சரத்குமார் குறித்து பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு சில தகவல்களை கொடுத்துள்ளார். சரத்குமார், நடிகை தேவயானியுடன் சேர்ந்து பல படங்களில் ஜோடியாக நடித்திருந்தார். அப்படி இருவரின் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததோடு காதலும் உருவாகியது என்று கிசுகிசுக்கப்பட்டது.

அந்த நேரத்தில் தான் விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் விக்ரமனின் இயக்கத்தில் சரத்குமார், விக்ரம், தேவயானி போன்றவர்கள் நடிப்பில் உருவானது. படம் வெளியாகி ஃபிளாப்பானது. அப்படத்தின் ஷூட்டிங் சமயத்தில் சரத்குமாருக்கும், விக்ரமுக்கும் முதல் ஷாட் என்பதால் காலையில் இருந்து காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் இருவரையும் இயக்குனர் கூப்பிடவே இல்லையாம்.

ராதிகாவுக்கு முன் பிரபல நடிகையுடன் காதல்!! 2 ஆம் திருமணம் செய்ய ஆசைப்பட்ட சரத்குமார்.. | Sarathkumar Angry Shooting Devayani Started Love

ரொம்ப நேரம் கழித்து தான் தெறிந்துள்ளது நடிகை தேவயானியை வைத்து இயக்குனர் சின்ன காட்சியை எடுத்துக்கொண்டு இருப்பதாக. இதனை அறிந்த சரத்குமார் கோபத்தில் இயக்குனரிடம் சண்டையிட அடிதடி வரைக்கும் சென்றிருக்கிறதாம். காலையில் இருந்து உட்கார்ந்திட்டு இருக்கோம் ஒரு ஷாட் கூட எடுக்கவில்லை, சின்ன சீனை இத்தனை நேரமா தேவயானியை வைத்து எடுத்து இருக்காய் என்று கண்டபடி பேசியிருக்கிறார்.

மேடையில் ஓவர் பந்தா காட்டி அசிங்கப்படுத்திய நயன்தாரா.. பேரை கேட்டாலே வெறுப்பாகும் முன்னணி நடிகர்..

மேடையில் ஓவர் பந்தா காட்டி அசிங்கப்படுத்திய நயன்தாரா.. பேரை கேட்டாலே வெறுப்பாகும் முன்னணி நடிகர்..

அதன்பின் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் இடையில் நின்று அந்த பிரச்சனையை சரி செய்து மீண்டும் படத்தினை ஆரம்பித்து முடித்து வைத்திருந்தனர். அப்படத்திற்கு பின் தான் தேவயானி மீது சரத்குமாரிடம் அதிக ஈர்ப்பு வந்து காதலும் செய்திருக்கிறார்கள். தேவயானியும் அதற்கு ஓகே சொல்லி இருக்கிறார். அதன்பின் தான் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்திருக்கிறார்கள் சரத்குமார் - தேவயானி.