விளம்பரத்திற்காக இப்படியா! கடவுளை இழிவு படுத்திய பிக்பாஸ் 5 பிரபலம்!
இந்திய சினிமாவில் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். இந்தியில் சமீபத்தில் 15 வது சீசன் நிறைவடைந்தது. அந்நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்ண்டம் போன்ற தென்னிந்திய மொழி தொலைக்காட்சிகளில் நடத்தப்பட்டு ஒளிப்பரப்பு செய்து வருகிறது.
இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் 5 சீசனில் கலந்து கொண்டு போன சில வாரத்தில் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டவர் 7 ஆர்ட்ஸ் சரயு ராய். க்ளாமரை மையப்படுத்தி குறும்படம் விளம்பரம் என நடித்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பதிவிட்ட ஒரு குறும்படத்தில் மது அருந்திவிட்டு போதையில் சிலர் விநாயகரை புகழ்ந்து கோஷம் எழுப்புவது போல அதில் காட்டப்பட்டுள்ளது.
அதில் நடித்த காரணத்திற்காக இந்துக்கள் மனதை புணபடுத்துவது போன்று அமைந்துள்ளதாக விஷ்வ இந்து பரிஷ் அமைப்பினர் நடிகை சரயு ராய் மீது புகாரளித்தனர். சில தினங்களுக்கு முன் போலிசாரால் சம்மன் அனுப்பட்டு ஆஜாராகியுள்ளார் சரயு ராய்.