சரிகமப 5 ரன்னர் அப் சபேசனை நியாபகம் இருக்கா!! இப்போ எங்க இருக்கார் தெரியுமா?
ஜீ தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதர்வை பெற்று வரும் சரிகமப நிகழ்சியின் லிட்டில் சாப்ம்ஸ் சீசன் 5 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பலரும் தங்களை பிரபலப்படுத்திக் கொண்டு பல பணிகளை செய்து வருகிறார்கள்.

சரிகமப சீனியர் 5 சபேசன்
அப்படி கடந்த ஆண்டு நிறைவு பெற்ற சரிகமப சீனியர் 5 நிகழ்ச்சியின் முதலாவது ரன்னர் அப் வாங்கிய சபேசன், தற்போது எப்படி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் இருந்து சென்னை வந்த சபேசன், தன்னுடைய திறமையை நிரூபித்து கடைசி வரை சிறப்பாக பாடி முதல் ரன்னர் அப் இடத்தை பிடித்தார். அதன்பின் மீண்டும் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 5ல் ஒருசில எபிசோட்களில் கலந்து கொண்டார்.

இது ஒரு பக்கம் இருக்க, தற்போது கனடாவின் டொராண்டோ சிட்டிக்கு சென்றுள்ளார் சபேசன். தமிழர் தகவல் சஞ்சிகையின் 35வது ஆண்டு விருது வழங்கும் விழா நிகழ்வுக்கு சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து அந்த செய்தியை சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.
