சரிகமப சீனியர் 5!! அரங்கையே கண்ணீரில் உருகவைத்த போட்டியாளர் பிரதீபா..
சரிகமப சீனியர் 5
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப. இந்நிகழ்ச்சியில் ஜூனியர் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த மே 11 ஆம் தேதியோடு நிறைவடைந்தது.
டைட்டில் வின்னராக திவினேஷ் தேர்வு செய்யப்பட்ட நிலையில் சரிகமப நிகழ்ச்சியில் அடுத்த நிகழ்ச்சி எப்போது ஆரம்பிக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர். சரிகமப நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளனர்.
போட்டியாளர் பிரதீபா
இதற்கான ஆடிஷன் நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மே 24 ஆம் தேதி ஒளிப்பரப்பாகவுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக டி ராஜேந்தர் கலந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் பிரதீபா என்ற போட்டியாளர் உருக்கமாக பாடி நடுவர்கள், டி ராஜேந்தர் உள்ளிட்ட பலரை கண்ணீர் வரவைத்துள்ளார். குறித்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு போட்டியாளர் பிரதீபாவை பாராட்டி வருகிறார்கள்.