அந்த இடத்தில் மச்சத்தை நீக்க ஆப்ரேஷன் செய்ய சொன்ன இயக்குனர்.. கண்ணீர்விட்டு அழுத நடிகை சரோஜா தேவி

B Saroja Devi Tamil Actress
By Edward Feb 12, 2024 10:30 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் கன்னடத்து பைங்கிள், அபிநய சரஸ்வதி என்று அடைமொழிகளால் புகழப்பட்டு வந்தவர் நடிகை பி சரோஜா தேவி. 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த சரோஜா தேவி அதிக சம்பளம் வாங்கிய நடிகையாகவும் அந்த காலக்கட்டத்தில் திகழ்ந்து வந்தார். சரோஜா தேவியின் முதல் படத்தில் மகாகவி காளிதாஸ் நடிக்கும் போது இவரை போட்டோ எடுத்திருக்கிறார்.

அந்த இடத்தில் மச்சத்தை நீக்க ஆப்ரேஷன் செய்ய சொன்ன இயக்குனர்.. கண்ணீர்விட்டு அழுத நடிகை சரோஜா தேவி | Saroja Devi About Her Eye Mole Removal Director

அப்போது அவர் கண்ணில் இருந்த மச்சத்தை நீக்க வேண்டி ஆப்ரேஷன் செய்ய சொல்லி பயமுறுத்திவிட்டார்களாம். அதனால் அழுததோடு மட்டுமில்லாமல் அவரது அம்மாவிடம் சொல்லி இந்த படம் வேண்டும் சென்றுவிடலாம் என்று கூறியிருக்கிறாராம். அதன்பின் சரோஜாதேவியை அவரது அம்மா சமாதானபடுத்தி இயக்குனரிடம் பேசியிருக்கிறார். அதற்கு அந்த இயக்குனர் குருவாக நினைக்கும் சீத்தா ராம் சாஸ்திரியிடம் ஆப்ரேஷன் பற்றி கேட்டுள்ளார்.

அவர் சொன்னதை கேட்டவுடன் அந்த இயக்குனர் கடுமையாக சிரிக்க ஆரம்பித்திருக்கிறார். உங்கள் மகளை கேலி செய்யத்தான் அவர் அப்படி கூறியிருக்கிறார் என்றும் கண்னில் இருக்கும் அந்த மச்சத்தல் தான் மிகப்பெரிய ஹீரோயினாக வருவாள் என்றும் அவர் கூறினாராம்.

விவாகரத்திற்கு காரணமே ரஜினி தான்.. முதல் மனைவி குறித்து விஷ்ணு விஷால்

விவாகரத்திற்கு காரணமே ரஜினி தான்.. முதல் மனைவி குறித்து விஷ்ணு விஷால்

அப்போது நான் அதை நம்பவில்லை, இந்த படத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றாலே போதும் என்ற எண்ணம் தான் இருந்தது. ஆனால் அவர் சொன்னது போல் என் முதல் படமே தேசிய விருதினை பெற்று கொடுத்து அடுத்தடுத்த வாய்ப்பினையும் கொடுத்து நல்ல அந்தஸ்த்தை கொடுத்ததாக நடிகை சரோஜா தேவி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.