கட்சிக்குள் கொளுத்தி போடும் சசிகலா? மூன்றாக பிரிக்க திட்டம்போடும் கூட்டம்..
இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் யாரும் வியந்து பார்க்கும் அளவிற்கு பெரிய வெற்றியை கண்டது திமுக கட்சி. எதிர் கட்சியாக இருந்தாலும் எதாவது ஒரு குறை கொள்ளவேண்டும் என்பதற்காகவே வெளிநடப்பு போராட்டம் என போட்டு வருகிறார்கள் இபிஎஸ் மற்றும் ஓ பி எஸ் அணியியை வளர்க்கும் அதிமுக கட்சியினர்.
இதற்கு இடையில் சசிகலா ஜெயிலில் இருந்து வந்து அமைதியாக இருந்தார். சிங்கம் எப்படி மானை வேட்டையாட காத்திருக்குமோ அப்படியொரு நாளை சில தினங்களுக்கு முன் கையில் எடுத்தார் சசிகலா.
ஏற்கனவே அதிமுக கட்சியில் இரு அணிகள் உருவாகி முக்கிய அதிகாரிகள் ஓபிஎஸ் பக்கம் செல்ல அது சசிகலாவின் அணி இருக்கலாம் என்று கிசுகிசுக்கப்பட்டது. எதிர்பார்த்த அளவிற்கு நல்ல வரவேற்புதான் சசிகலாவிற்கு கிடைத்துள்ளது.
மதுரையில் 59வது குருபூஜையில் சசிகலா கலந்து கொள்கிறார். இந்த குரு பூஜையில் சசிகலா தனது பலத்தை நிரூபிப்பார். தனது இருக்கும் ஜாதி ரீதியான தென் மண்டல அதிமுக ஆதரவை நிரூபிப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தரப்போ சசிகலாவிற்கு ஆதரவு எல்லாம் இல்லை அதெல்லாம் தானாக சேர்ந்த கூட்டம் இல்லை என்று கூறும் அளவிற்கு கட்சியில் உள்ளே சில கருப்பு ஆடுகளை திணித்து நெருப்பில் எண்ணெய் ஊற்றி வருகிறார் சசிகலா.
இதற்கு பின்னணியில் டெல்லி அரசும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கடைசியில் திமுகவை விழ்த்த இன்னொரு ஒரு அணி உருவாக்கலாமோ என்னவோ... பார்ப்போம்... அடுத்த தேர்தலில்....