சந்துரு கேஸ் எப்படி முடிச்சேன் பாத்தியா! பல்டி அடிச்சுட்டாரு சீமான்
ஜெய் பீம் படத்தில் கேலெண்டர் பிரச்சனை இன்னும் முடிந்தபாடில்லை என்று தான் கூற முடிகிறது. நாளுக்கு நாள் எதிர்ப்பவர்கள் பேச படக்குழு பேச படத்தின் மார்க்கெட் தான் வசூல் படைக்கிறது.
அப்படி அனைத்து கட்சி சார்பாக எதிர்த்தும் ரசிகர்கள் சூர்யாவுக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார்கள்.இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சீமான், அக்னி கலசம் வன்னியர் சங்கத்தின் முத்திரை என்பது தெரிந்தும் ஜெய் பீம் படத்தில் வைக்காமல் தவித்திருக்கலாம் என்று கூறியிருந்தார்.
இதற்கு படத்தின் இயக்குநர் விளக்கம் அளித்ததை பார்த்து அப்படியே பல்டி அடித்து பதிவிட்டுள்ளார் சீமான். ஜெய் பீம்' படம் குறித்தான தம்பி ஞானவேல் அவர்களின் கடிதம் கண்டேன்.
தாமதமாக வெளிவந்தாலும் மிகச்சரியாகத் தனது தரப்பு விளக்கத்தை அளித்து, இச்சிக்கலுக்கு முழுவதுமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
