என்னது நீயெல்லாம் செலபிரிட்டியா! ஆர்யாவின் முன்னாள் காதலிபோட்ட ஸ்டோரிஸ்..
சின்னத்திரையை பொறுத்தவரையில் சீரியலோ நிகழ்ச்சியோ எதில் வந்தாலுமே தான் செலபிரிட்டி என்ற மோகம் வந்துவிடும். அப்படி பிரபல தொலைக்காட்சி கலர்ஸ் டிவியில் நடிகர் ஆர்யாவை வைத்து சில வருடங்களுக்கு முன் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை. அதில் ஆர்யாவுக்கு மாப்பிள்ளை தேடும் பணிக்காக 18 மாடல் நடிகைகளை வரவழைத்து போட்டிகள் நடத்தினர்.
அதில் அபர்மூவர் கடைசி இடத்தில் இருந்தனர். அவர்களை யார் ஆர்யா தேர்ந்தெடுப்பார் என்ற ஆர்வத்தில் இருந்த அனைவருக்கும் ஆர்யா செக் வைத்து ஷாக் கொடுத்தார். இருவரை திருமணம் செய்தால் அவர் கோச்சிப்பாங்க, அவரை செய்தால் இவர் கோச்சிப்பார் என்று கதையை மாற்றி மழுப்பினார். அனைத்தையும் ஜாலியாக இருந்த ஆர்யாவிற்கு அப்போது பெரிய விமர்சனங்கள் எழுந்தது.
அந்த நிகழ்ச்சியில் கடைசி நான்கு இடத்தினை பெற்ற அபர்ணதி மட்டும் தான் நடிகையாக வளம் வருகிறார். அப்படியிருந்தும் 6ya என்ற எழுத்தை தன் சமுகவலைத்தள பக்கத்தில் மாற்றாமல் இருக்கிறார். இதையடுத்து ஒருசில படங்களில் நடித்தும் ஜெயில் படம் வெளியாகவும் உள்ளது.
இந்நிலையில் இறுதி இடத்தினை பிடித்த மூவரில் சீதாலட்சுமி தன்னை செலபிரிட்டி என்று கூறிக்கொண்டு அவர் போடும் போஸ்ட் இருக்க ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் KAILAS Fathion Week என்ற மாடல் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தன்னை அழைத்துள்ளனர் என்று ஸ்டோரிஸில் போட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
