எட்டிப்பார்த்த சாய் பல்லவி!! செல்வராகவன் செய்த செயல்!! பிரபல நடிகை ஓபன் டாக்..

Suriya Sai Pallavi Selvaraghavan Gossip Today
By Edward Jun 18, 2024 07:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் தன் சிறப்பான இயக்கத்தால் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி இருப்பவர் இயக்குனர் செல்வராகவன். துள்ளுவதோ இளமை படத்தில் ஆரம்பித்து நானே வருவேன் படம் வரை மிகப்பெரிய படங்களை கொடுத்து டாப் இயக்குனராக மாறினார். அவர் இயக்கத்தில் அதிக பட்ஜெட் படமாக அமைந்தது ஆயிரத்தில் ஒருவன்.

எட்டிப்பார்த்த சாய் பல்லவி!! செல்வராகவன் செய்த செயல்!! பிரபல நடிகை ஓபன் டாக்.. | Selvaraghavan Not Allowed Monitor Anyone

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது நடிப்பில் ஆர்வம் காட்டி நடித்து வரும் செல்வராகவன் பற்றி NGK படத்தில் நடிகர் சூர்யாவின் அம்மாவாக நடித்த நடிகை உமா சில தகவலை பகிர்ந்துள்ளார். மற்ற இயக்குனர்கள் தனக்கென ஒரு மானிட்டர் வைத்து அதை பார்த்து சீன் சரியாக வந்திருக்கிறதா? இல்லையா என்று பார்ப்பார்கள்.

ஹீரோ, ஹீரோயின்களையும் பார்க்க அனுமதிப்பார்கள். ஆனால் செல்வராகவன் மானிட்டர் பக்கம் யாரையும் விடவேமாட்டார். அது எந்த பெரிய நடிகராக இருந்தாலும் சரி, இதுவரை யாரையும் அவர் அனுமதித்ததே இல்லை.

எட்டிப்பார்த்த சாய் பல்லவி!! செல்வராகவன் செய்த செயல்!! பிரபல நடிகை ஓபன் டாக்.. | Selvaraghavan Not Allowed Monitor Anyone

அதேபோல் இந்த படத்திலும் சூர்யா உட்பட யாரையும் மானிட்டர் பக்கம் அனுமதுக்கவே இல்லை. ஒருமுறை சாய் பல்லவி மானிட்டரில் தன் முகம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க எட்டிப்பார்த்திருக்கிறார். உடனே செல்வராகவன் நோ நோ இது என்னுடையது, யாரும் வரக்கூடாது என்று போகசொல்லிவிட்டார் என்று உமா பகிர்ந்துள்ளார்.