செல்வராகவன் சொன்னது இப்போ தானே புரியுது.. தனுஷ் பற்றி அப்போவே சொல்லிட்டாரா?
செல்வராகவன் நடிகர் தனுஷ் விவாகரத்து பற்றி சில மாதங்கள் முன்பே மறைமுகமாக பதிவிட்டு இருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் கடந்த 18 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது பிரிவதாக அறிவித்து இருக்கின்றனர்.
அவர்களுக்கு நடுவில் இதற்கு முன் பலமுறை பிரச்சனை வந்திருப்பதாகவும், இந்த முறை அது விவாகரத்து வரை சென்று இருப்பதாகவும் செய்தி வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் செல்வராகவன் இதற்கு முன் தனுஷ் பற்றி மறைமுகமாக சில ட்விட்களை பதிவிட்டு இருக்கிறார். அதன் அர்த்தம் இப்போது தான் புரிகிறது என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
ட்விட்கள் இதோ..
இன்னொருவர் இருந்தால்தான் நிம்மதி என்று ஒரு பொழுதும் நினைத்து விடாதீர்கள். உண்மையில் அதைப் போல் ஒரு இம்சை எதுவும் இல்லை. தனிமையில் இருப்பதே பேரின்பம். பெரும் நிம்மதி. 🤓🤓
— selvaraghavan (@selvaraghavan) September 25, 2021
வாழ்க்கையில் மிகக் கொடுமை“ என்ன பாத்துக்க யாருமே இல்லையே “” என்ற புலம்பல்தான். உங்களை எதற்கு “ஒருவர் ‘ பார்த்துக் கொள்ள வேண்டும் ? அது மருத்துவமனையில் நோயாளியாய் இருப்பது போல.! உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். அது கடவுளே உங்களை பார்த்துக் கொள்வது போல். !
— selvaraghavan (@selvaraghavan) January 4, 2022
தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்.
— selvaraghavan (@selvaraghavan) December 3, 2021