அப்பாவுக்கு கேன்சர்.. பண கஷ்டத்தால் அதை செய்தேன்!! நடிகை ஆலியா மானசாவின் மறுப்பக்கம்..
விஜய் தொலைக்காட்சியில் சில ஆண்டுகளுக்கு முன் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வர்வேற்பு பெற்ற ராஜா ராணி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆலியா மானசா. அந்த சீரியலில் நடித்த போது கதாநாயகனாக நடித்த சஞ்சீவை காதலித்து இரு குழந்தைகளுக்கு தாயாகினார் நடிகை ஆலியா. இடையில் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த ஆலியா, தற்போது இனியா சீரியலில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியொன்றில், கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சினிமா வாய்ப்பு தேட ஆரம்பித்தேன். காலியில் எழுந்து மேக்கப் போட்டுக்கொண்டுஆடிஷனுக்கு செல்வேன். சில நேரம் அவர்கள் சொல்லும் விஷயம் எனக்கு செட்டாகாது. பல நேரம் அவர்களே அழைப்பதாக கூறி அனுப்பி விடுவார்கள்.
அந்நேரம் குடும்பத்தில் பணத்தேவை இருந்ததால் ஜிம் பயிற்சியாளராகவும் குழந்தைகளுக்கு நடனம் சொல்லிக் கொடுப்பவராகவும் பாடலில் பின்னணி நடனமாடுபவராகவும் வேலைகளை செய்து வந்தேன்.
ஆனால் சினிமாவில் முயற்சி செய்து கொண்டே இருந்தபோது தான் சின்னத்திரை வாய்ப்பு வந்தது. அப்போது என் அப்பாவுக்கு கேன்சர் நோய் பாதிக்கப்பட்டு இருந்தார். அதனால் அப்பாவை காப்பாற்ற சினிமா கனவை விட்டுவிட்டு சீரியலில் நடிக்க வந்தேன்.
சினிமாவில் நடித்து இருந்தால் தீபாவளி பொங்கலுக்கு தான் என்னை பார்த்திருப்பார்கள் தினமும் சீரியலில் பார்த்திருக்க மாட்டார்கள். என்னை குடும்பத்தில் ஒருத்தியாக பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தன்னுடைய மறுப்பக்கத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.