விவாகரத்தாகி மகன் இருக்கும் போது குடும்பத்தை மீறி இரண்டாம் திருமணம்!! கணவரை பிரிந்தாரா சீரியல் நடிகை தீபா..
சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து பல கஷ்டங்களை சந்தித்து இருக்கிறேன் என்று சீரியல் நடிகை தீபா பாபு சமீபத்திய பேட்டிகளில் பகிர்ந்துள்ளார். 16 வயதில் திருமணம் செய்து ஆண் குழந்தையை பெற்ற தீபா, கணவரை விவாகரத்து செய்து சமீபத்தில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
முதல் திருமணத்தால் பல கஷ்டங்கள் அனுபவித்து அதிலிருந்து நானும் என் மகனும் இப்போது நன்றாக வாழ்ந்து வருகிறோம் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் பகிர்ந்திருந்தார்.
இதன்பின் கணேஷ் பாபு என்ற தயாரிப்பாளரை, அவரின் குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி பதிவு திருமணம் செய்து கொண்டு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் காதல் திருமணம் செய்த கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகை தீபா வழக்கு தொடர்ந்துள்ளார்.
கணேஷ் பாபுவின் குடும்பத்தினர் தன்னை சாதி ரீதியாக இழிவுபடுத்தியதாகவும் தீபா குற்றச்சாட்டு வைத்திருப்பது சின்னத்திரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.