7 வருட திருமண வாழ்க்கை!! 31 வயதில் விவாகரத்தாகாமல் தனிமையில் வாழும் சீரியல் நடிகை ரக்ஷிதா?

Serials Rachitha Mahalakshmi
By Edward May 10, 2022 08:20 AM GMT
Report

சின்னத்திரையில் நடித்து பிரபலமான நடிகைகள் பலர் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்து நல்ல வரவேற்பு பெருவார்கள். அப்படி பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்து அறிமுக நடிகையாகினார் ரக்ஷிதா மகாலட்சுமி.

இந்தொடரை அடுத்து இளவரசி சீரியலில் நடித்தப்பின் பிரபல தொலைக்காட்சி தொடரான சரவணன் மீனாட்சி சீரியலில் இரண்டாம் மற்றும் மூன்றாம் சீசனில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். பின் 2015ல் சீரியல் நடிகர் தினேஷ் கோபாலசாமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இருவரும் நாச்சியார் சீரியலில் நடிக்க ஆரம்பித்தனர். பின் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் மகா கதாபாத்திரத்தில் ஒரே ஆண்டுகள் மட்டும் நடித்தார். இந்நிலையில் தன் ஆசை கண்வருடன் மன கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

நடிப்பு தான் வாழ்க்கை என்று கடின உழைப்போடு நடித்து வரும் ரக்ஷிதா விவாகரத்து பெறாமல் தனிமையில் வாடுவதாக சமீபத்தில் ஒரு பதிவில் பகிர்ந்துள்ளார். சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்து வரும் ரக்ஷிதா கணவர் இழந்து ஒரு குழந்தையை வளர்க்க போராடும் பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அந்த கதாபாத்திரம் தன்னுடைய வாழ்க்கையை போன்றுள்ளது என்றும் தனிமை தனக்கு மன வேதனையை தருவதால் அதை எதிர்கொள்ளும் துணுவும், தைரியமும் எனக்கு இருப்பதாக மறைமுகமாக ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார்.

இதனை வைத்து கணவரை விவாகரத்து செஞ்சிட்டீங்களா என்று கருத்துக்களை கேள்வியாக கேட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.