என் பொண்ண ரெட் லைட் ஏரியால விட்ருவேன்னு மிரட்டுனாங்க!! அதிர்ச்சி கொடுத்த நடிகை சாய் லட்சுமி..

Serials Gossip Today Tamil TV Serials Tamil Actress Actress
By Edward May 30, 2024 04:45 PM GMT
Report

சின்னத்திரை சீரியல் நடிகையாக நடித்து பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை சாய் லட்சுமி. ஒரு மகள் இருக்கும் நிலையில் அவரது கணவர் மரணமடைந்தது வருக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்திருந்தது. அதிலிருந்து மீண்டு பாக்கியலட்சுமி சீரியலில் சிறு ரோலில் சாய் லட்சுமி நடித்து வருகிறார்.

என் பொண்ண ரெட் லைட் ஏரியால விட்ருவேன்னு மிரட்டுனாங்க!! அதிர்ச்சி கொடுத்த நடிகை சாய் லட்சுமி.. | Serial Actress Sai Lakshmi And Daughter Emotional

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், என் கணவரை எனக்கு ரொம்பவே பிடிக்கும், அவர் இறக்கும் போது மூன்றாவது நபராக தான் இருந்தோம். அந்தளவிற்கு அவர் ஆளே மாறியபடி இறந்துகிடந்தார் என்றும் என் மாமியார் 5 ஆண்டுகள் கழித்து என் கணவரை யாரோ கொன்றுவிட்டார்கள் என்று சொன்னார்கள்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை, பின் மண்டையில் அடுத்து மதுவில் விஷம் கலந்து கொடுத்து சாகடித்திருக்கிறார்கள் என்று கூறினார். எங்களை அவருக்கு சடங்குகூட பண்ணவிடல, எதுவும் பண்ணவிடல.

நடிகையுடன் 36 முறை லிப்லாக் கொடுத்த ஜிவி பிரகாஷ்!! விவாகரத்துக்கு பின் வைரலாகும் ரகசியம்..

நடிகையுடன் 36 முறை லிப்லாக் கொடுத்த ஜிவி பிரகாஷ்!! விவாகரத்துக்கு பின் வைரலாகும் ரகசியம்..

தொழில் நஷ்டம் ஆகியதால் கடன்காரர்கள் தொல்லை அதிகமாகிவிட்டது. பின் கேரளாவில் இருந்து கனடா போகுறமாதிரி பிளான் போட்டார். அதற்கு முன் பார்ட்டி கொடுத்திருக்கிறார். அந்த பார்ட்டியில் தான் இப்படி நடந்தது என்று என் மாமியார் சொன்னார். ஒரு சின்ன விஷயத்தை என்னிடம் கூறாமல் மறைத்து வைத்திருந்தார்.

25 லட்சம் கடன் தரனும் என்று ஒருத்தர் சொல்லியபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கணவர் உயிரோடு இருக்கும் போது என்னையும் என் மகளையும் அடமானமாக வைத்தார்கள். ரெண்டு நாள் அவங்க வீட்டில் இருந்து பின் எங்களை கூட்டிச்சென்றார். என்ன நடந்தது என்று எங்களுக்கு இப்போது வரை தெரியாது.

என் பொண்ண ரெட் லைட் ஏரியால விட்ருவேன்னு மிரட்டுனாங்க!! அதிர்ச்சி கொடுத்த நடிகை சாய் லட்சுமி.. | Serial Actress Sai Lakshmi And Daughter Emotional

என் கணவர் இறந்த பின் நைட் எனக்கு கால் செய்து, நீ பணம் கொடுக்கவில்லை என்றால் உன் மகளை (Red Light Area) அங்க விட்டுவிடுவேன் என்று மிரட்டினார்கள். இரவு கால் செய்து அசிங்கம் அசிங்கமாக யார் யாரோ பேசுவார்கள். அதன்பின் போலிசில் எங்களை மிரட்டிய கணவர் - மனைவி மீது புகாரளித்தேன் என்று நடிகை சாய் லட்சுமி தெரிவித்துள்ளார்.