என் போட்டோவ எப்படிடா போட்ட!! ஆதியை சரமாரியாக விளாசிய நடிகை ஸ்வேதா...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியலான சின்ன மருமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்வேதா.

நடிகை ஸ்வேதா
சமீபத்தில், தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆதி என்பவர் ஸ்வேதா குறித்து பேசி சர்ச்சையை கிளப்பினார். இதனையடுத்து ஸ்வேதாவின் கணவர் ஆதி, தன்னுடைய நகைகளை வாங்கி ஏமாற்றியதாக பிக்பாஸ் பிரபல தாமரை செல்வி புகாரளித்தும் சில வீடியோக்களில் ஆதி பற்றிய உண்மையை உடைத்தும் பேசி வருகிறார். ஆதியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அளித்துள்ள ஸ்வேதா, கண்ணீருடன் பேசி வீடியோவை பகிர்ந்துள்ளார்.

என்ன பண்ண முடியுமோ பண்ணு, நான் பாத்துக்கிறேன். என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை, எதாவது பண்ணிப்பனோன்னு இருக்கு. அப்படி சைக்கோ போல எல்லாம் செய்கிறாய், நான் மெண்ட்டலி பாதிக்கப்படுகிறேன், நீ எல்லாம் மனுஷனே கிடையாது. எனக்கு எதாவது ஆனால் அதற்கு அவன் மட்டும்தான் காரணமாக இருப்பான் என்று எல்லோருக்கும் சொல்கிறேன் என்று கண்ணீரோடு அழுது கொண்டே பேசியிருக்கிறார் ஸ்வேதா.

என் போட்டோவ எப்படிடா போட்ட
மேலும் பேசியவர், என் பர்மிஷன் இல்லாமல் என் போட்டோவை எப்படிடா போடுவ. அதையெல்லாம் நான் தானே எடுத்தேன், உன்னை நம்பி தானே எடுத்தேன். என் போன் இல்லாமல் என் பர்மிஷன் இல்லாமல் அந்த போட்டோவை எப்படி எடுத்த.
உனக்கு போன்ல எல்லாமே தெரியும், உன்னோட அறிவ எதுக்கு யூஸ் பண்ணனுமோ அதுக்கு பண்ணாம, சில்லறைத்தனமான விஷயத்துக்கு யூஸ் பண்ணி, போட்டோவ எடுத்து அதை போட்டு, சிம்பதி உருவாக்கி, புருஷனுன்னு சொல்ற.
நீ யாரு, உன்னை யாருக்காவது தெரியுமா? வேலைக்கு போயிருக்கியா, கஷ்டப்பட்டு இருக்கியா. அதெல்லாம் தெரிந்து இருந்தால் இப்படி நடந்து இருக்கமாட்டேன். விவாகரத்து கேட்டப்பின்னும் திருந்தாம, எவ்வளவு பேரை எமாத்திட்டு இருக்க, யாரை வேணாலும் ஏமாத்து, ஒரு நாள் நீ மாட்டுவன்னு உனக்கு தெரியாதா? என்று சரமாரியாக கேட்டுள்ளார் ஸ்வேதா.
"என் Permission இல்லாம Photos எப்படிடா போட்ட.." 😡 Serial Actress Swetha | Chinna marumagal pic.twitter.com/WHPl4LGydD
— anushiya (@anushiyaxx) April 15, 2026