அடுத்தவன் குடும்பத்தில் விளக்கு பிடிக்க நீ.. பைத்தியக்காரா!! பயில்வானை வெளுத்து வாங்கும் நடிகை ஷகீலா..
தமிழ் சினிமாவில் தற்போது வரை பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது சுசித்ரா, மற்றும் பயில்வான் ரங்கநாதனை பற்றிய தான். அந்தளவிற்கு இருவரும் பேசி வரும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நடிகை ஷகீலா, சுசித்ரா மற்றும் பயில்வான் சம்பந்தமான சில விஷயத்தை காரசாரமாக பேசியுள்ள வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதில், சுசித்ரா எனக்கு கால் செய்து பேசினார். பயில்வானை திட்டி பேசியதை பாராட்டி பேசினார்.
பெரிய நடிகர்களை பற்றி பேசியது எது உண்மை பொய் என்று எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் சுசித்ரா பேசியதில், பயில்வான் மலையாள படங்களுக்கு ஆர்ட்டிஸ்ட் சப்ளை செய்கிறார் என்றும் எனக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்து இருக்கிறார் என்றும் கூறியது உண்மை கிடையாது. இதுபற்றி சுசித்ரா என்னிடம் கால் செய்து கேட்டிருக்கலாம், ஆனால் அந்த ஆள் அப்படி கிடையவே கிடையாது. மாமா பையன் என்று பேசுவதெல்லாம் தவறு. அதற்கு ஆதாரம் இருக்கிறது என்றால் அதை காட்டுங்கள், பயில்வான் அந்த வேலை செய்யவில்லை என்று ஷகீலா கூறியிருக்கிறார்.
ஷகீலாவுக்கு பயில்வானுக்கு என்ன பிரச்சனை என்பதை ஷகீலா கூறினால் தான் தெரியும் என்று சுசித்ரா கேட்டிருக்கிறார். எனக்கு பிரச்சனையே கிடையாதே, உங்களை பேசுவதால் தான் நான் பேசுகிறேன். என்னை பற்றி பேசினால் தான் நான் கவலைப்படப்போகிறேன். பயில்வானுடன் அந்த நிகழ்ச்சியில் பேசிய போது, என்னை படுமோசமாக அசிங்கமாக பேசினார். உன்னை ஒரு புழுவாகத்தான் பார்க்கிறேன்.
அவர் என்னை பேசியது கஷ்டமாக போய்விட்டது. அவள் ஒரு....(தகாத வார்த்தை கூறி) ப்ளூ ஃபிலிமில் நடிச்சவள். அடப்பைத்தியக்காரா?..... ப்ளூ ஃபிலிம் என்ன என்று நான் சொல்கிறேன். ஓப்பனாக தப்பு பண்ணுவது தான் ப்ளூ ஃபிலிம். நான் பண்ணது போர்ன் ஃபிலிம்ஸ். அதுலயும் நான் பண்ணல, பிட்டு எடுத்து போட்டாங்க. நான் ஊரில் இல்லாத போது நீ பேசல, வெளிநாட்டில் இருந்தேன். இல்லன்னா குத்தி கிழிச்சிருப்பேன்.
நான் போர்ன் ஃபிலிம் பண்ணலன்னு சொன்னாதானே. நான் மலையாளத்தில் அப்படிநடித்து டாப் இடத்தை பிடித்துவிட்டேன். நான் உன்னை அண்ணன் வாங்க போங்க என்று பேசுனேன், இனிமேல் நான் அப்படி பேசமாட்டேன். நான் அப்படி ஒருவார்த்தை சொன்னால் உன் அம்மா தான் கஷ்டப்படுவார்கள் என்று ஷகீலா வெளுத்து வாங்கி பேசியிருக்கிறார். பயில்வானுக்கு ஆதரமும் கிடையாது மூளையும் கிடையாது, அவர் ஒரு செய்தியை பார்த்து தான் கூறுகிறார், அது தான் அவருக்கு ஆதாரம்.
பயில்வான் ரங்கநாதன் கிடையாது, பயில்வான் பைத்தியக்காரன். என் வீட்டில் யாருக்கு பிரச்சனை என்று உனக்கு தெரியுமா? உனக்கு எதுவும் தெரியாது, எதுக்கு மனுஷனாக சுற்றிக்கொண்டு இருக்க. அவள் மகள் பொண்ணை மட்டும் காதலிக்கவில்லை, ஒரு பையனையும் காதலிக்கிறாள். அதற்கு எனக்கு ஆதாரம் இருக்கிறது என்று ஷகீலா தெரிவித்துள்ளார்.