அண்ணன் மகளுடன் சண்டை..கேவலம் பயில்வான் எல்லாம் என்ன அப்படி பேசுனான்!! நடிகை ஷகீலா கண்ணீர் பேச்சு..
நடிகை ஷகீலா
தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி நாயகியா இருந்து தற்போது மிகப்பெரிய அந்தஷ்த்தை பெற்று வருபவர் நடிகை ஷகீலா. குக் வித் கோமாளி, பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார் ஷகீலா.
தற்போது பிரபலங்களை பேட்டி எடுத்தும் பல யூடியூப் சேலல்களில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டும் வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தன்னுடைய சகோதரரின் மகள் சீத்தல் குறித்து எமோஷ்னலாக பேசியிருக்கிறார் ஷகீலா. அதில், என் அண்ணா, அக்கா வேற ஒரு அப்பாக்கு பிறந்தவங்க. ஒரே அம்மா, நான் என் தம்பி என் தங்கச்சி ஒரு அப்பாவுக்கு பிறந்தவங்க தான்.
என் தங்கச்சி நூர்ஜஹானுடன் மகள் சீத்தல் தான் இவள். நான் அவளை எதுவும் கட்டாயப்படுத்தவில்ல. கொரானா சமயத்தில் அவளுக்கு கிட்னி இழந்துவிட்டது என்பதால், டயாலிசிஸ் பண்ண வேண்டும் என்று டாக்டர் சொன்னாங்க. அதன்பின் வேளாங்கன்னி மாதாவிடம் சென்று வேண்டியப்பின் அவளுக்கு டயாலிசிஸ் பண்ண வேண்டாம் என்று சொன்னார்கள்.
சகோதரரின் மகள் சீத்தல்
அவளுக்கு கொரானா சம்யத்தில் 3 அரை லட்சம் செலவு பண்ணினேன். என் அண்ணன் என் மேல் அப்படி பாசமா இருந்தாரு, யார் என்ன சொல்லி கொடுத்தாங்கன்னு தெரியல, நடுவுல தேவையில்லாத பிரச்சனை.
இவங்க இப்படி பண்ணதால கேவலம் பயில்வான் ரங்கநாதன் எல்லாம், உங்க வீட்ல பிரச்சனை நடக்கலையான்னு கேட்டான் என்று ஷகீலா எமோஷ்னலாக பேசியிருக்கிறார். சில வருடங்களுக்கு முன், ஷகீலாவுடன் தங்கி இருந்த சீத்தல் அவரை தாக்கிவிட்டு தாய் சசி வீட்டுக்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.