விஜய் கூடவா வேண்டவே வேண்டாம்!! வழியில்லாமல் நடித்த பிரபல நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி..
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்ந்து வரும் நடிகை விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தினை தொடர்ந்து அடுத்த படம் யாருடன் நடிப்பார் என்று பலரும் கேள்வி கேட்டு வந்த நிலையில், அரசியல் கட்சி ஆரம்பித்ததால் அடுத்து கமிட்டாகிய ஒரு படத்தோடு சினிமாவில் இருந்து வெளியேறவுள்ளதாக விஜய் கூறியிருப்பது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
விஜய்யின் அரசியல் குறித்து அவருடன் பணியாற்றியது குறித்து பல பிரபலங்கள் பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார்கள். அந்தவகையில் பிரபல கவர்ச்சி நடிகையாக 90ஸ் காலக்கட்டத்தில் பிரபலமான நடிகை ஷகீலா, விஜய் பற்றிய ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.
அழகிய தமிழ் மகன் படத்தில் நான் நடிக்கும் போது, விஜய் ஷூட்டிங்கில் யாருடனும் பேச மாட்டார் என்று பலர் நினைத்திருந்தனர். அதனால் விஜய்யுடன் எனக்கு காமினேஷன் இருக்கக்கூடாது. அப்படியென்றால் நான் அந்த படத்திற்கு வருகிறேன் என்று கூறினேன். இயக்குனருடன் கண்டீசனுக்கு ஒப்புக்கொண்டு விஜய்யுடன் காமினேஷனே கிடையாது என்று கூறினார்கள்.
நான் அப்படி ஏன் சொன்னேன் என்றால், நாங்கள் பழகி ரொம்ப வருடமாகிவிட்டது. இப்போது பெரிய இடத்தில் இருப்பதால் யாரிடமும் விஜய் பேசமாட்டாராம். அதனால் தான் காமினேஷன் இல்லைன்னு சொன்னங்க. ஆனால், அவருடன் முதல் ஷார்ட்டே அவரோடு தான்.
அப்போது ஹாய் ஷக்கீன்னு கூப்பிட்டார். அவர் அப்படி கூப்பிட்டதும் அந்த யூனிட்டே பார்த்தாங்க. ஹலோ சொல்றதா, என்ன சொல்றதுன்னே தெரியல, எதிர்ப்பார்க்கவே இல்லை. தூரத்தில் இருந்தே அப்படி என்னை கூப்பிட்டார் என்று ஷகீலா கூறியிருக்கிறார்.