500 சவரன் நகை, 125 கோடி வீடு போச்சி!! 25 வருஷமா 4 குழந்தையோடு ரோட்டில் நின்னேன்!! நடிகை சாந்தி...
தமிழ் சினிமாவில் 70, 80, 90களில் டாப் நடிகையாக இருந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து பிரபலமானவர் நடிகை சாந்தி. தற்போது சீரியல்களிலும் படங்களிலும் குணச்சித்திர ரோலில் நடித்து வருகிறார். பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான வில்லியம்ஸ் என்பவரை 1979ல் திருமணம் செய்து 4 குழந்தைகளை பெற்றெடுத்தார். அதன்பின் ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸுடன் 25 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தார். அதன்பின் வில்லியம்ஸ் உடல்நலக்குறைவு காரணமாக 2005ல் மரணமடைந்தார்.
பிடிக்காத திருமணம்
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தன்னுடைய கணவர் உயிரோடு இருந்த போது கூட தான் அனுபவித்த கஷ்டங்கள் என்ன என்று பகிர்ந்துள்ளார். பிடிக்காத திருமணம் தான் எனக்கு நடந்தது. ஆனால் அப்பா வார்த்தயை மீறி எதுவும் செய்ய முடியாமல் போனது. அவரை தப்பாக சொல்லமாட்டேன், அவர் எனக்கு கடவுள். ஒரு படத்திற்காக வில்லியம்ஸ் எங்கள் குடும்பத்தினரிடம் கேட்டு நடிக்க வைத்து பின் அவரே, வந்து என்னை பெண் கேட்டு அப்பாவை சம்மதிக்க வைத்தார். அப்பாவிடம் பிடிக்கவில்லை என்று சொல்லியும் அவர் ஏன் அதில் கடினமாக இருந்தார் என்று எனக்கு தெரியவில்லை.
திருமணத்திற்கு பின் நடிக்கக்கூடாது என்று கணவர் சொன்னார். நெஞ்சத்தை கிள்ளாதே படத்திற்கு பின் படம் வரிசையாக வந்தபோது வெளியில் வந்துவிட்டேன். வாழ்க்கையில் சந்தோஷமாக நான் இல்லை. அவர் ஷூட்டிங் மீது மட்டுமே பாசமாக இருந்தாரே தவிர எங்களிடம் சந்தோஷமாக இல்லை. வலிகள் பல அவரிடம் அனுபவித்திருக்கிறேன், கோபம் வந்தால் என்னிடம் காட்டுவார், அடிப்பார். இதற்கிடையில் விவாகரத்து வரை சென்றேன். 25 வருஷம் அவருடன் வாழ்ந்தேன்.

ஜிவி பிரகாஷை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சைந்தவி.. ஜீவனாம்சம் இவ்ளோ பணமா?...பரபரப்பை கிளப்பும் பிரபலம்
500 சவரன் நகை, 125 கோடி வீடு
வேறு யாராவது இருந்தால் தற்கொலை செய்திருப்பார்கள். 1992ல் மாரடைப்பு ஏற்பட்டு சரியான பின் பல நஷ்டம் ஏற்பட்டது. பின் அவருக்கு யாரும் உதவ வரவில்லை. 10 வருஷம் அவரைவைத்து படாதபாடுபட்டேன். அவர் செத்தாலும் பரவாயில்லை என்று சொல்லி நான் நடிக்க வந்தேன், அதுவும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தான். இந்த கடைசி 10 ஆண்டில் கடன் மாறிமாறி வாங்கி வாங்கினேன்.
25 ஆண்டுகளில், எங்க வீடு போச்சு, எல்லாமே போச்சு, எதைபற்றியும் அவர் கவலைப்படவில்லை, ஜடமாக இருந்தார். அப்படியிருந்தாலும் அவருடன் வாழ்க்கை என்று இருந்தேன். கடன் வாங்கி 500 சவரன் நகை போச்சி, இன்னைக்கு என் வீட்டோடு மதிப்பு 120 கோடி தேரும், அந்த வீடு போச்சி. இப்போது என் பிள்ளைகள் தான் என்னை பார்த்து வருகிறார்கள் என்று எமோஷ்னலாக பேசியிருக்கிறார் நடிகை சாந்தி வில்லியம்ஸ்.