மே 20 விஜய் வாழ்க்கையில் மிகவும் சோகமான நாள்- ஏன் தெரியுமா?
தமிழ் சினிமா மக்கள் தலையில் வைத்துக் கொண்டாடும் ஒரு முன்னணி நடிகர் விஜய். 65 படங்களை வரை நடித்துள்ள அவர்து திரைப்பயணத்தில் நிறைய சறுக்கல்கள் இருக்கிறது.
அதையெல்லாம் நினைத்து அவர் துவண்டுபோகாமல் தனது அடுத்தடுத்த பணிகளையே நோக்கி பணியாற்றி வருகிறார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான வம்சி இயக்கத்தில் விஜய் தனது 66வது படத்தில் நடிக்கிறார், படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது.
விஜய்யின் தாயார் ஷோபனா நிகழ்ச்சிகளில் அதிகம் பங்குகொள்பவர். அண்மையில் ஒரு நிகழ்ச்சி அவர் விஜய் குறித்து ஒரு சோகமான விஷயத்தை கூறியுள்ளார். அதாவது மே 20, விஜய்யின் தங்கை வித்யா நினைவு தினமும்.
வருடா வருடம் இந்த நாளில் ஷோபனா அவரது மகளின் புகைப்படத்தை விஜய்க்கு அனுப்பினால் அவர் எனக்கு நியாபகம் இருக்கிறது அம்மா என்று கூறுவாராம்.
விஜய் தங்கை இறந்த காலகட்டத்தில் பள்ளிகளில் கூட அதிகம் அழுதுக்கொண்டே இருந்திருக்கிறாராம்.