அவுட்டோர் ஷூட்டிகில் பீரியட்ஸ் வலி!! கல்யாணத்துக்கு முன் அந்த சமயத்தில் நடிகர் சித்து செய்த செயல்..
சினிமா வட்டாரத்தில் ஜொலிப்பதை போல் சின்னத்திரை வட்டாரத்தில் இருப்பவர்கள் பிரபலமாகி ஜொலித்து வருகிறார்கள். அப்படி பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் தான் நடிகை ஸ்ரேயா அஞ்சன். ஒருமுறை ஷூட்டிங் சமயத்தில் எதிர்பாராத விதமாக பீரியட்ஸ் ஏற்ப்ட்டு அந்நேரத்தில் பட்ட வேதனைகளை சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பகிர்ந்திருக்கிறார்.
நடிகர் சித்துவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா அஞ்சன் ஒருசில சீரியலில் நடித்து வருகிறார். சமீபத்திய பேட்டியில், எனக்கு தமிழ் பேசத்தெரியாத போது தமிழ் சொல்லித்தந்ததே சித்து தான். அதன்பின் ஒரு நாள் நடந்த சம்பவம் இன்றுவரை மறக்கமுடியவில்லை. கொடைக்கானல் ஷூட்டிங்கின் போது எதிர்ப்பாரத விதமாக பீரியட்ஸ் ஏற்பட நான் அங்கு பேடு ஏஎதும் எடுத்துக்கொண்டு செல்லவில்லை.
ஷூட்டிங்கை கேன்சல் செய்து நாங்கள் இருக்கும் இடத்திற்கு செல்ல கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் ஆகும். அதனால் என்ன செய்வது என்று நான் குழம்பி இருந்த எனக்கு சித்து பல்வேறு வகைகளில் உதவியை செய்திருக்கிறார். அவர் செய்த உதவியின் மூலம் மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டு, அவரை பிடிக்க ஆரம்பித்தது. அதன்பின் தான் அவரை திருமணம் செய்து கொண்டேன்.
சிலர் எப்போது குழந்தை என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் எங்கள் வீட்டில் இருப்பவர்கள் எங்களிடம் எந்த ஒரு வார்த்தையும் கேட்கவில்லை என்றும் அவர்களுக்கு நன்றாகத்தெரியும் நாங்கள் தற்போது பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறோம்.
இந்த முடிவை நாங்கள் தள்ளிப்போட்டு இருக்கிறோம் என்று
நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். சீரியலில் கர்ப்பிணியாக நடித்த போது எங்கே குழந்தை என்று கேட்க
ஆரம்பித்தும் விட்டார்கள், அதற்கான சரியான நேரம் அமையும் என்று ஸ்ரேயா அஞ்சன்
தெரிவித்திருக்கிறார்.