சாந்தனுவுடன் திருமணமா? இப்படியொரு பதிலை கூறி ஷாக் கொடுத்த கமல் மகள் ஸ்ருதி..
உலக நாயகன் மகளாக பின்னணி பாடகியாகவும் 3, 7ஆம் அறிவு போன்ற படங்கள் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இப்படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.
கடைசியாக தமிழில் லாபம் படத்தில் நடித்திருந்த ஸ்ருதி, தற்போது சலார் படத்தில் பிரபாஸ்-க்கு ஜோடியாக இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடித்து வருகிறார். இடையில் தன் ஆசை காதலர் சாந்தனுவுடன் நேரத்தினை செலவிட்டு வருகிறார்.
சமீபத்தில் வட இந்திய ஊடகத்திற்கு ஆன்லைன் மூலம் பேட்டி கொடுத்து படங்கள், பெற்றோர்கள், காதலர், திருமணம் என பகிர்ந்து கொண்டுள்ளார். நான் தற்போது மும்பையில் பல ஆண்டுகளாக வசித்து வருடத்திற்கு ஒரு இந்தி படங்களில் நடித்தும் வருகிறேன்.
என் அம்மா சரிகாவுடன் இந்தியில் தான் பேசுவேன். அப்படியென்றால் என்னுடைய வீடு மும்பையும் தான். அப்படியிருக்கையில் என்னை தென்னிந்திய நடிகை என்று தான் இங்குள்ள ஊடகங்கள் கூறி வருகிறார்கள் அது மட்டும் ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தன்னுடைய பெற்றோர்கள் திருமணத்தில் எது நல்லது என்று தான் நான் பார்த்தேன். அவர்களுக்கென ஒரு நோக்கம் இருக்கிறது. ஒரு விஷயம் சரியாக படலாம், இல்லாமலும் போகலாம். இதைத்தான் பெற்றோர்கள் பிரிந்ததை நல்ல மனதோடு ஏற்றேன்.
தற்போது இருவரும் பலவற்றை கடந்து அதுபற்றி நினைப்பதை விட்டுவிட்டார்கள். இதனால் நானும் திருமணம் செய்யாமல் இருப்பேன் என்று நினைக்க வேண்டாம். புத்திசாலியான ஜோடிகள் தான் என் பெற்றோர். அதனால் தான் நானும் காதல் பற்றி சரியான முடிவெடுத்துள்ளேன்.
சாந்தனு ஒரு ஓவிய கலைஞர். இன்னும் அவர் நடிக்க வரவில்லை. திருமணத்தை பற்றி நான் பதற்றத்தில் இருக்கிறேன். உடனே அதில் நான் குதிக்க மாட்டேன். பிளான் செய்து தான் அதை நிறைவேற்றுவேன் என்று கூறியிருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.