சித்தார்த்தை ஓட வைக்க வாரிசு குடும்பங்கள் போட்ட பிளான்!! ஆதரவு கொடுத்த நெருக்கம் காட்டிய கமல் மகள் ஸ்ருதி..
தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் நடிகர் சித்தார்த். இயக்குனர் மணிரத்னமுடன் உதவி இயக்குனராக பணியாற்றியும் படங்களில் நடித்து பிரபலமானார் சித்தார்த். பல சர்ச்சைகளில் சிக்கி வந்த சித்தார்த், நடிகை அதிதி ராவுடன் காதலில் இருந்து லிவ்விங் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். சமீபத்தில் இருவரும் நிச்சயம் முடித்துவிட்டோம் என்று மோதிரத்துடன் ரொமான்ஸ் புகைப்படத்தை பகிர்ந்தார்கள் சித்தார்த் - அதிதி.
இந்நிலையில் சித்தார்த் பற்றிய சில தகவலை பிரபல பத்திரிக்கையாளர் பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். அதில், பொதுவாக சித்தார்த் எப்படி என்றால் வாய்த்துடுக்குன்னு சொல்லுவார்களே அப்படிப்பட்ட ஆள் தான், அது ரொம்ப அதிகம். அப்படி தெலுங்கு சினிமாவில் இருக்கும் போது அங்கிருந்த மீடியாக்களிடம் ஏடாகுடமாக பேசிவிடுகிறார். பின் ஒட்டுமொத்த தெலுங்குதுறையும் சித்தார்த்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அந்த சமயத்தில் அவருக்கு ஆதரவாக இருந்தவர் தான் நடிகர் ஸ்ருதி ஹாசன்.
இருவரும் சேர்ந்து படம் பண்ணும் போது அவருக்கு ஸ்ருதி ஹாசன் சப்போர்ட் செய்கிறார். தெலுங்கில் வாரிசு அரசியல் அதிகரித்து இருக்கும் சமயம். அப்போது சித்தார்த்த தரப்பில் என்ன சொல்கிறார்கள் என்றால், சித்தார்த் வளர்ச்சியை பார்த்து அங்கிருந்த, தெலுங்கு சினிமா குடும்பங்கள், மீடியாக்களை தூண்டிவிட்டுள்ளனர். சித்தார்த்துக்கு எதிராக கேள்விகளை கேட்டு கோபமடையச் செய்கிறார்கள். சித்தார்த் மார்க்கெட் போன நடிகர் கிடையாது.
அவர் தோரணை அப்படியே இருக்கிறது. ஏறக்குறைய பிளேபாயாகவும் இருந்திருக்கிறார். ஸ்ருதிஹாசனுடன் லிவ்விங் வாழ்க்கையில் இருந்தார். சமந்தாவுடனும் காதலில் இருந்தார். அதன்பின் சித்தார்த். சமந்தா பிரிவு ஏற்ப, சின்ன சிம்பு என்றும் கூறி வந்தனர். பிரகாஷ் ராஜுக்கு இணையாக மத்திய அரசை எதிர்த்து பேசி வந்தார் சித்தார்த். பின் அதிலிருந்து வெளியில் வந்தார். சித்தா படத்தின் தெலுங்கு பிரஸ் மீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததற்கு பலர் ஆதரவு கொடுத்தனர்.
2021 படத்தில் மகாசமுத்திரம் படத்தில் நடித்த போது சித்தார்த்துக்கு அதிதிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிச்சயதார்த்தம் ரகசியமாக செய்வது ஏன்? என்ற கேள்விக்கு, அந்த காலத்தில் கிசுகிசு எழுந்தால் பயங்கரமாக கோபப்படுவார்கள். பிரபுதேவாவும் அப்படி கோபட்டிருக்கிறார். மீடியாக்கள் வளர வளர, திடீர் திருமணம், நிச்சயதார்த்தம் ரகசியமாக நடக்க அதிகரிக்கிறது. மீடியாக்களை சித்தார்த் - அதிதி சந்திக்க விரும்பவில்லை என்று மூத்த பத்திரிக்கையாளர் கூறியிருக்கிறார்.