தூங்ககூட விட மாட்றாங்க.. அப்படியொரு கொடுமை!! நடிகையிடம் புலம்பிய நடிகை சில்க் ஸ்மிதா..
90ஸ் காலக்கட்டத்தில் கவர்ச்சி நடிகையாக அனைத்து இளசுகளை தன கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா. தென்னிந்திய வட இந்திய மொழிகளில் நடித்து கொடிக்கட்டி பறந்த நடிகை சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்ட விசயம் இன்று வரை யாராலும் சகித்துக்கொள்ள முடியாத சம்பவமாக இருக்கிறது.
அப்படி அவரை பற்றி பல நட்சத்திரங்கள் தகவல்களை பகிர்ந்து வருவதை போல், செய்யாறு பாலு ஒரு சம்பவத்தை கூறியிருக்கிறார். நடிகை சில்க் ஸ்மிதா ஒரே நாளில் 6 படங்களில் நடித்த காலம். அந்த அளவிற்கு நேரமே இல்லாமல் படங்களின் கால்ஷீட் அடுத்தடுத்து சில்க்கை புக் செய்து வருவார்கள்.
ஒருமுறை நடிகையும் டான்சருமான டிஸ்கோ சாந்தியிடம் பேசிய சில்க் ஸ்மிதா, என்னை தூங்கவே விட மாட்றாங்க, தூக்கமே மறந்து போய்விடும் போல் இருக்கு என்று வேதனையாக கூறியிருக்கிறார்.
அதற்கு டிஸ்கோ சாந்தி, இப்படியே போனால் உன் உடம்பு மோசமாகிவிடும், தயவு செய்து கேட்கிற எல்லாருக்கும் கால்ஷீட் கொடுக்காதே என்று அட்வைஸ் செய்திருக்கிறார் என்று செய்யாறு பாலு குறிப்பிட்டிருக்கிறார்.