ஆண், பெண் குரலில் பாடிய பிக்பாஸ் பிரபலம்!! திருநங்கை என்று கலாய்த்தவருக்கு பதிலடி கொடுத்த நபர்..
திரைப்படங்களில் பாடுவது மட்டுமில்லாமல் பல கச்சேரிகளில் கலந்து கொண்டு பாடி வரும் பாடகி லக்ஷ்மி ஜெயனை சிலர் திருநங்கை என்று கலாய்த்துள்ள விஷயம் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. கடந்த 2021ல் மலையாள பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு 13 நாட்கள் மட்டும் இருந்து வெளியேறி பிரபலமான லக்ஷ்மி ஜெயன், திருவனந்த புரத்தை சேர்ந்தவர்.
சமீபத்தில் நடந்த ஒரு மேடை கச்சேரி நிகழ்ச்சியில் ரோஜா படத்தில் இடம் பெறும் புது வெள்ளை மழை பாடலை பாடியிருக்கிறார். அப்பாடலில் ஆண், பெண் குரல்களில் அவரே பாடியிருக்கிறார். பெண் குரலில் பாடிக்கொண்டே, அப்படியே ஆண் குரலில் பாடி அனைவரையும் அதிரவைத்திருக்கிறார். இதற்கு பலர் பாராட்டி கருத்துக்களை தெரிவித்த நிலையில்.
சிலர் பாடகி லக்ஷ்மி ஜெயன் ஒரு திருநங்கை என்று கூறி கமெண்ட் செய்திருக்கிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் ரசிகர் ஒருவர், லக்ஷ்மி ஜெயன் ஒரு அழகான ஆண் மகனை பெற்றெடுத்த 100 சதவீத பெண். அவர் வயில் கலைஞராகவும் பிக்பாஸ் நிகழ்ச்சி நட்சத்திரமாகவும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் இருந்தவர்.
ரேடியோ ஜாக்கி என பல திறமை கொண்ட லக்ஷ்மி ஜெயன் விவாகரத்து பெற்றவர் என்று கூறி பதிலடி கொடுத்திருக்கிறார். இதற்கு லக்ஷ்மி ஜெயனும் தன்னை அப்படி நெகட்டிவாக பேசியவர்களுக்கு பதிலடி கொடுத்த படி ஒரு கருத்தினை கூறியிருக்கிறார்.
இதுபோல சில பெண்கள் இரு குரல்களில் பாடுகிறார்கள். ஆனா இந்தப் பெண்ணின் ஆண் வாய்ஸ் செம கம்பீரம் pic.twitter.com/wRoKB8NXjM
— ???? ???? ??? & ???? (@FilmFoodFunFact) July 19, 2024
