பிரேம்ஜி, இந்துவை உசார் செய்ய நான் தான் பிளான் போட்டு கொடுத்தேன்!! பாடகி வினைதா ஓப்பன் டாக்
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் பாடகராகவும் திகழ்ந்து பிரபலமானவர் நடிகை பிரேம்ஜி அமரன். தன்னுடைய அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த பிரேம்ஜி, விஜய்யின் கோட் படத்திலும் வெங்கட் பிரபு நடிக்க வைத்திருக்கிறார். 45 வயதாகியும் முரட்டு சிங்கிளாக இருந்த பிரேம்ஜி கடந்த வாரம், இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சாதாரணமாக நடைபெற்ற பிரேம்ஜி - இந்து திருமணத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். ஏற்கனவே பாடகி வினைதாவை பிரேம்ஜி காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்யவுள்ளார்கள் என்றும் கிசுகிசு எழுந்தது. ஆனால் பிரேம்ஜி - இந்துவின் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கிறார் பாடகி வினைதா.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பிரேம்ஜி காதல் பற்றி பகிர்ந்துள்ளார். பிரேம்ஜியும் நானும் சிங்கிளாக இருந்தோம், அவன் என்னை ஏமாத்திவிட்டான். பிரேம்ஜியையும் ஜெய்யையும் தான் நம்பி இருந்தேன். எங்க கேங்கில் நான் தான் பொண்ணாக சிங்கிளாக இருந்தேன்.
வீட்டுக்கெல்லாம் போய் கோலம் போடப்போறியான்னு பிரேம்ஜி கலாய்த்து இருக்கிறான். அப்படி சொன்னவே இப்படி கல்யாணம் பண்ணுன்னு நினைக்கல. ஜெய் கூட கல்யாணம் பண்ணிப்பான்னு நினைச்சேன், ஆனால் பிரேம்ஜியை வாய்ப்பில்லைன்னு நினைத்தேன். அவன் லவ்வுக்கே நான் தான் ஐடியாவே கொடுத்தேன்.
பிரேம்ஜி சிங்கிளாக இருக்கும் போது இந்து பிரப்போஸ் பண்ணும் போது நான் தான் ஐடியா கொடுத்தேன். இப்படி பண்ணு என்று என்னிடம் கேட்டு ஆசீர்வாதம் வாங்கினான். சும்மா ஆசிர்வாதம் பண்ணேன் இப்படி கல்யாணம் பண்ணிட்டு வந்துடுவான்னு நினைக்கல என்று வினைதா கூறியிருக்கிறார்.