நடிச்சது மூன்றே படம் தான்!! தயாரிப்பாளரிடம் பணத்திமிரை காட்டிய சிவகார்த்திகேயன் பட நடிகை..
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை பிரியங்கா அருள் மோகன். குறைவான காலத்தில் அதுவும் தமிழில் நடித்த மூன்று படங்கள் மிகப்பெரிய வரவேற்பை அவருக்கு கொடுத்தது. டாக்டர், டான் போன்ற படங்களில் சிவகார்த்திகேயனுக்கு தொடர்ந்து ஜோடியாக நடித்து பெரியளவில் பேசப்பட்டார்.

அதன்பின் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார். தற்போது தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து மிகபெரிய பேக்கப் கேரியரை ஆரம்பித்து வருகிறார்.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் அவர் நடித்த டிக்டாக் என்ற படம் கிடப்பில் இருந்துள்ளது. அப்படத்தின் தயாரிப்பாளர் பிரியங்கா கிளாமரில் தாராளம் காட்டி நடித்த திரைப்படத்தை வெளியிட தயாராகிவிட்டாராம். இதனை கேள்விப்பட்ட பிரியங்கா மோகன் தயாரிப்பாளரிடம் சென்று படத்தினை வெளியிட வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

அந்த படம் திரையில் வந்தால் தன்னுடைய மார்க்கெட் அடிவாங்கும் என்றும் தன் இமேஜ் குறைந்துவிடும் என்று கூறி ரிலீஸ் செய்யும் முயற்சியை கைவிடும் படி கேட்டுள்ளார்.
மேலும் ஒரு படிக்கு மேல் சென்ற பிரியங்கா, படத்தின் செலவு எவ்வளவு என்பதை கேட்டு மொத்தமும் கொடுத்துவிடுகிறேன் என்று தன்னுடைய பணத்திமிரை காட்டியிருக்கிறார்.

நடிச்சது ரெண்டே படம் அதற்குள் ஆணத்தில் தலைக்கால் புரியாமல் ஆடுறாங்களே என்று சினிமாவை சேர்ந்தவர்கள் விமர்சித்தும் வருகிறார்களாம்.
ஒரு தயாரிப்பாளர் படம் எடுத்து ரிலீஸ் செய்யாமல் இருந்தால் அவரின் மன நிலையும் கஷ்டத்தையும் நடிகை நடிகர்கள் அறிவதில்லை என்றும் குற்றச்சாட்டையும் பலர் கூறி வருகிறார்கள்.