தலைக்கனத்தில் ஆடிய சிவகார்த்திகேயனை கைக்கழுவிய பினான்ஸியர்!! கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லை
சின்னத்திரையில் இருந்து வந்து வெள்ளித்திரையில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்த்தை பெற்று வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சில வருடங்களுக்கு முன் பல தோல்வி படங்களை கொடுத்து கடன் தொல்லையில் சிக்கித்தவித்து வந்தார்.
அதற்காக ஒரே தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் கொடுத்து நடித்தும் வந்தார். அப்படி ஓரளவிற்கு கடன் தொல்லையில் இருந்து மீள அடுத்தடுத்த படங்களில் நடித்து அதற்காக தன்னுடைய சம்பளத்தினை 30 கோடி அளவிற்கு உயர்த்தினார்.
அந்த சமயத்தில் டாக்டர், டான் போன்ற 100 கோடி வசூல் படத்தினை கொடுத்ததோடு அவரின் மார்க்கெட் மற்றும் வியாபாரமும் அதிகரித்து. அதை நம்பி காமெடி மட்டும் போதும் என்று நினைத்து தலைக்கனத்தில் இருந்த சிவகார்த்திகேயனுக்கு பிரின்ஸ் படம் படுமோசமான விமர்சனத்தோடு பல கோடி நஷ்டத்தை தயாரிப்பாளர்களுக்கு கொடுத்தது.
பழைய ஃபார்ம்க்கு திரும்ப வர எப்படியாவது மாவீரன் படத்தின் வெற்றியால் முறியடிக்க வேண்டும் என்று இருக்கிறார். ஆனால் அப்படமும் ஷூட்டிங் பாதியில் அவ்வப்போது நிறுத்தப்பட்டும் வருகிறது.
இதற்கிடையில் மாவீரன் படத்தின் சில காட்சிகள் எடுக்க தாமதமாகி ஷூட்டிங் நாட்கள் அதிகமானதால் அப்படத்திற்கு பினான்ஸ் செய்து வந்த அன்பு செழியன் விலகி இருக்கிறார். சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய தூணாக இருந்தவர் வெளியில் சென்றது அவருக்கு மிகப்பெரிய தோல்வியை கொடுத்துள்ளது.
மேலும் சிவாகார்த்திகேயன் 24வது படமாக உருவாகவுள்ளது என்ற அப்டேட் வந்ததில் இருந்து அப்படத்தின் கதி என்ன என்று இன்று வரை செய்திகள் வெளியாகவில்லை. இப்படி அனைத்து இடத்திலும் அடிவாங்கி செய்வதறியாது முழித்தும் குழப்பத்திலும் இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன்.