சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவா இது!! இப்படி வளர்ந்துட்டாங்களே.. பொங்கல் புகைப்படம்..
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு கால் பதித்து டாப் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். டான், டாக்டர் போன்ற 100 கோடி வசூல் படத்தினை கொடுத்து மிகப்பெரிய இடத்தினை பிடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
மாவீரன் படத்தினை தொடர்ந்து கமல் ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படத்தில் நடித்திருந்தார்.
சில பிரச்சனைகள் டெக்னிக்கல் வேலைகளால் படம் பல ஆண்டுகள் கழித்து கடந்த 12 ஆம் தேதி வெளியாகியிருக்கிறது. நல்ல வரவேற்பை பெற்று வந்த அயலான் படத்திற்கான பிரமோஷன் வேலைகளையும் சிவகார்த்திகேயன் செய்து வருகிறார்.
தற்போது தன் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அப்புகைப்படத்தை அயலான் படத்தில் நடித்த ஏலியன் இருப்பது போல் எடிட் செய்திருக்கிறார்கள்.
அதிலும் முதல் மகள் ஆராதனா வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாமல் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக்கிங் ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.


