சிவகார்த்திகேயன் பண்ண ஒரு தப்பு.. சூரிக்கு செக்!! மீண்டும் SK-வுக்கு வந்த பிரச்சனை..
சினிமாவில் தன்னுடைய திறமையால் முன்னுக்கு வந்தவர்களில் முக்கியமானவர் நடிகர் சூரி. துணை நடிகராக நடித்து பின் காமெடி நடிகராகி தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். விடுதலை, கருடன் படத்தினை தொடர்ந்து விடுதலை 2 படத்தில் நடித்து வரும் சூர்யா, பி எஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மலையாள நடிகை அன்னா பென்னுடன் ஜோடி போட்டு கொட்டுக்காளி படத்தில் நடித்திருந்தார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ஃபோர்ம் பிரிவில் தேர்வு செய்து 2024 பிப்ரவரி 16ல் திரையிடப்பட்டது. தற்போது படம் ஆகஸ்ட் 23ல் வெளியாகவுள்ள நிலையில், ரிலீஸ் ஆவதில் ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம்.
அதுவும் யாராலே அந்த பிரச்சனை என்றால் சிவகார்த்திகேயன் செட்ய்ஹ ஒரு தவறாம். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் ஃபிளாப் ஆன நிலையில் மிகப்பெரிய கடனில் தவித்து வந்திருக்கிறார். கடனில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர அயலான் படம் சிவகார்த்திகேயனுக்கு பிரச்சனை ஏற்பட்டது.
படத்தின் டிஸ்ட்ரிபியூட்டருக்கு நஷ்டம் ஏற்பட்டதால் அதை சரி செய்ய சிவகார்த்திகேயன் 9 கோடி கொடுக்க வேண்டும். அப்போது தான் கொட்டுக்காளி படத்தை ரிலீஸ் பண்ண முடியும் என்று செக் வைத்துள்ளனர். என்ன செய்வது என்று புலம்பி தவித்த சிவகார்த்திகேயன் இப்படத்தின் லாபத்தை வைத்து மிகப்பெரிய ஆசையில் காத்துக் கொண்டிருக்கிறாராம்.
