4 வருஷமா ஜோதிகாவுக்கு வில்லனாக இருந்த தந்தை.. சூர்யா காதலுக்கு நான் முட்டுக்கட்டையில்லை! சிவக்குமார்
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாகவும் ரியல் ஜோடிகளாக மக்கள் மத்தியில் சிறந்த ஜோடி என்ற பேரும் பெற்றவர்கள் சூர்யா - ஜோதிகா. சூர்யாவின் ஆரம்பக்கட்ட சினிமா வாழ்க்கையில் ஜோடி போட ஆரம்பித்தவர் நடிகை ஜோதிகா.
1999ல் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் ஜோடியாக நடுத்த இருவரும் 8 படங்களில் இணைந்து நடித்திருந்தார்கள். அப்படி இருக்கும் போது பிரண்ட்ஸ் படத்தின் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. அப்போது இருவரின் காதல் விசயத்தில் சில சிக்கல்கள் உருவாகியது.
அதற்கு காரணம் சூர்யா ஜோதிகாவின் காதலை சிவக்குமார் எதிர்ப்பதாக செய்திகள் அப்போது கசிந்தது. இதுகுறித்து சிவக்குமார் சமீபத்தில் சித்ரா லட்சுமனன் பேட்டியில் உண்மையை கூறியுள்ளார். அந்த காலத்தில் இருந்தே 150 படத்தில் நான் காதல் படத்தில் நடித்திருக்கிறேன்.
அப்படி டயலாக்கெல்லாம் பேசிவிட்டு ஒரு பையன் ஒரே பொண்ணை காதலிப்பதற்கு அதுவும் 4 வருஷமா காத்திருக்கும் போது ஏன் வேண்டாம் சொல்லமுடியும். கல்யாணம் பண்ணா பண்ணிப்பேன் இல்லனா இப்படியே இருப்பேன் என்று இருவரும் கூறியதால் திருமணத்தினை செய்து வைத்தோம்.