இரவு நேர பார்ட்டியால் படவாய்ப்பு! கொடிக்கட்டி பறந்த புன்னகை அரசி..
தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்ற பெயரோடு தன் சிரிப்பால் ஈர்த்து வந்தவர் நடிகை கே ஆர் விஜயா. அவருக்கு அடுத்து புன்னகை அரசி என்ற பெயரை கைப்பற்றியவர் நடிகை சினேகா. 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்த சினேகா என்னவளே படத்தின் மூலம் நடிகையாகினார்.
குடும்ப கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வந்த சினேகா நைட் கிளப்பிற்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அப்படி அங்கு செல்லும் போது தொழிலதிபர் ஒருவர் படவாய்ப்பிற்கு கூப்பிட்டுள்ளார். இதை அங்கு தான் எனக்கு வாய்ப்பே கிடைத்தது என்று சினேகாவே கூறியுள்ளாராம்.
பின் நாக் ரவி என்ற தயாரிப்பாளருடன் காதலித்து நிச்சயம் வரை சென்றார் சினேகா. அதன்பின் வாழ்க்கையை நல்ல வகையில் பயன்படுத்தி பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு இரு குழந்தைகளை பெற்றெடுத்து சினிமாவில் இருந்து விலகினார்.
பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். போட்டோஷூட் எடுத்து இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டும், சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் இருந்து வருகிறார். இந்த தகவல்களை பயில்வான் ரங்கநாதன் தனியார் யூடியூப் சேனலில் பதிவி செய்துள்ளார்.