பிரபலத்திடம் அப்படி நடந்து கொண்ட சூரி.. திரைக்கு பின்னால் இவரும் இப்படிப்பட்டவரா?..பயில்வான் சொன்ன தகவல்..
காமெடி ரோலில் நடித்து வந்த சூரி, தற்போது ஹீரோவாக மாறி கலக்கி வருகிறார். அவர் நடித்த விடுதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.
சமீபத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கருடன் படத்தின் இசை வெளியிட்டு விழா நடந்தது. இது தொடர்பாக பேசிய பயில்வான் ரங்கநாதன், வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் கதாபாத்திரத்தில் முதல் முதலாக நடிக்கவிருந்தது வேறொருவர்.
அந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன் என்று சொல்லி சூரி அந்த ரோலில் நடித்தார். அப்போது உண்மையில் சூரிக்கு பசி அதனால் தான் அந்த காட்சியில் நடித்தார். அதன் பின்னர் அவருக்கு பரோட்டா சூரி என்று பெயர் வந்தது.
கருடன் படத்தில் இசை வெளியிட்டு விழாவில், தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் பற்றி பேசவில்லை, சசி குமார் பற்றியும் பேசவில்லை. நாடோடிகள் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் சூரியை உள்ள கூட அனுமதிக்கவில்லை. அந்த படத்தில் நடித்திருக்கேன் என்று சொன்ன பிறகு அனுமதித்தார்கள்.
இதை பார்த்த சசி குமார் ஏழாவது ரோவில் உட்கார வைத்தார். அப்படி செய்த சசிகுமாரை சூரி மறந்துவிட்டார். கே.ஆர்.ஜி என்ன சொல்கிறார் என்றால், சினிமா நடிகர்கள் இடம் இருந்து நன்றி எதிர்பார்க்காதை. நன்றி எதிர்பார்த்தால் ஏமாற்றத்தை சந்திப்பாய் என சொன்னார் என்று பயில்வான் கூறியுள்ளார்.