சிவகார்த்திகேயனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் புலம்பித் தள்ளிய நடிகை கீர்த்தி சுரேஷ்!! உண்மையை கூறிய நடிகர் சூரி..
தமிழ் சினிமாவில் சிறு ரோலில் நடிக்க ஆரம்பித்து படிபடியாக காமெடி நடிகராக ஜொலித்து தற்போது ஹீரோவாக நடித்து பிரம்மிக்க வைத்து வருபவர் நடிகர் சூரி. வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமாகிய சூரி முன்னணி நடிகர்கள் படங்களில் லீட் காமெடியனாக நடித்து வந்தார். இதன்பின் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தற்போது கருடன் படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார். படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் கொட்டுக்காளி படத்தில் நடிக்கவும் இருக்கிறார். கருடன் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியளித்து வரும் சூரி, ரஜினி முருகன் படத்தில் நடந்த சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
படத்தில் நானும் சிவகார்த்திகேயனும் இயக்குனர் சார் எழுதி கொடுத்ததை பேசவே மாட்டோம். அதனால் இயக்குனர் சார், விளக்கமாக விஷயத்தை கூறிவிடுவார். அப்படி கார் வாங்கும் காட்சியில் மனோபாலா சாரும், கீர்த்தி சுரேஷும் இயக்குனரிடம் சென்று டயலாக் என்ன என்று கேட்பார்கள்.
அதற்கு இயக்குனர், கீர்த்தி இங்க இருக்குறத அவங்க பேசவே மாட்டாங்க, நீ இதை மனப்பாடம் பண்ணாத, கண்டிப்பா அவனுங்க ஆக்ஷன் சொன்னதும் வேறவேற மாதிரி பேசுவாங்கன்னு சொல்வார். அப்போ நான் எப்படி சார் என் டைம்க்கு எடுக்குறதுன்னு புலம்பும்.
இடையில் மனோபாலா சார் வருவாரு, கீர்த்தி ரிகர்சல் வரும் போது ரெண்டு டயலாக் தான் பேசுவாங்க அதற்கு அப்புறம் உள்ள என்ன நடக்குதுன்னே தெரியாது, வா நாம ரெண்டு பேரும் போட்டிப்போட்டு பேசுவோம் என்று சொல்லுவார். அப்படி தான் அந்த காட்சியில், "இவ்வளவு இங்கிலிஷ் பேச தெரிஞ்ச உனக்கு யாரு கிட்ட பேசணும்னு தெரியல பாத்தியா” என்று ஸ்பாட்டில் பேசிவிட்டேன் என்று சூரி கூறியிருக்கிறார்.