காலை எழுந்தவுடன் கண்டிப்பாக அதை செய்யும் நடிகை ஸ்ரீலீலா.. என்ன?
Tamil Cinema
Actress
Sreeleela
By Bhavya
ஸ்ரீலீலா
நடனம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நட்சத்திரங்களில் ஒருவர் ஸ்ரீலீலா. கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா 2 திரைப்படத்தில் ஒரே ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடி அசத்தியிருந்தார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் இவர், தற்போது பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். அதே போல் பாலிவுட்டிலும் Aashiqui 3 படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார்.

என்ன?
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் ஸ்ரீலீலா அவரை குறித்து சில அதிரடி தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதில், "திரையில் நான் ஒரு மாஸான தோற்றத்தில் இருந்தாலும், எனக்கு மெல்லிசை மற்றும் காதல் பாடல்கள் மிகவும் பிடிக்கும்.
காலை எழுந்தவுடனே பழைய தெலுங்கு பாடல்களை கேட்பேன். அந்த பாடல்கள் என் பரபரப்பான அன்றாட வாழ்க்கையில் அமைதியை தருகின்றன" என்று தெரிவித்துள்ளார்.