என்னடா இது நீலாம்பரிக்கு வந்த சோதனை!! நடிகை ஸ்ரீரெட்டியின் படையப்பா பஞ்ச் எப்படி இருக்கு..
தமிழ் நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவில் இருக்கும் சில நடிகர்கள் இயக்குனர்கள் தனக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறி சீரழித்ததாக கூறி அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி.
முன்னணி நடிகர்கள் பற்றி அவதூறாக பேசி சர்ச்சையாக்கி ஸ்ரீரெட்டி சமீபத்திய பேட்டியில் விஷால் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது அதையெல்லாம் நிறுத்துவிட்டு இணையதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களையும் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் வாய்ப்புகள் வரவில்லை என்பதால் சோசியல் மீடியாவில் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தின் நீலாம்பரி வசனத்தை பேசி ஷாக் கொடுத்துள்ளார். முழு நீலாம்பரியாக மாறி அவர் ரம்யா கிருஷ்ணனை போல் பஞ்ச் வசனத்தை பேசியதை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
அதை பார்த்த பலரும் ரம்யா கிருஷ்ணன் மேம் கண்ணில் படாத அளவிற்கு பார்த்துக்கொள்ளுங்கள் என்று ஸ்ரீரெட்டியை கலாய்த்து வருகிறார்கள்.